தனுஷுக்கு ஆப்பு வாய்த்த சிவகார்த்திகேயன்..! தனுஷிடம் இருந்து தப்பித்த அந்த நடிகை யார் தெரியுமா.?

0
Follow on Google News

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் அவருடன் இணைந்து காமெடி வேடத்தில் 3 படத்தில் நடித்தார். மேலும் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படம் தான், சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த படம். இதன் பின்பு அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்தியனை மீண்டும் தனது தயாரிப்பில் நடிக்க தனுஷ் அணுகியுள்ளார்.

அப்போது நான் வாய்ப்பு கொடுத்து சினிமாவில் வளர்ந்த பையன் அதனால குறைந்த சம்பளத்தில் எனது தயாரிப்பில் ஒரு படம் நடிக்கட்டும் என தனுஷ் தெரிவித்துள்ளார். ஆனால் சிவகார்திகேயன் தனக்கு தற்போது இருக்கும் மார்க்கெட் ஏற்ப சம்பளம் வேண்டும் என கேட்க. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன் பின்பு சிவகார்த்திகேயன் அசூர வளர்ச்சியடைந்து, இன்று ரஜினி, விஜய், அஜித் அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பொறுத்து கொள்ளமுடியாத தனுஷ் தனக்கு நெருக்கிய சினிமா நண்பர்களிடம், நான் தான் அந்த பையனுக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவன், என்று தெரிவிக்க, இது சிவகார்த்திகேயன் கவனத்துக்கு சென்ற உடன் யாருக்கு யார் வாழ்க்கை கொடுப்பது, அவர் வாய்ப்பு கொடுத்தார் என்று வேண்டுமானல் சொல்லலாம். ஒரு பெரிய இடத்தில் இருக்கும் தனுஷ் இப்படி பேசுவது அவருக்கு அழகு இல்லை என தனக்கு நெருங்கிய சினிமா துறையை சேர்ந்த நண்பர்களிடம் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது உள்ள சூழலில், சிவகார்த்திகேயன் சினிமாவில் அடுத்தடுத்து கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். ஆனால் தனுஷ் பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்து வருகிறார். சமீபத்தில் மனைவியை விட்டு பிரிந்த பின்பு பெரிதாக தனுஷ் கைவசம் எந்த ஒரு படமும் இல்லை. இந்நிலையில் தற்பொழுது சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கிறார், இந்த படத்தில் தனுஷ் இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.

புதிய படத்துக்கு நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வரும் தனுஷ் முதலில் போனி கபூர் மகளை அணுகியுள்ளார், ஆனால் போனி கபூர் மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகனை தனது படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ளார் தனுஷ். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியங்கா மோகன், தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் என மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.

இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பிரியங்கா மோகன், இரண்டு படமும் ஹிட். மேலும் அவர் நடித்த எதற்கும் துணிந்தவன் படம் தோல்வி அடைந்தாலும், அந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாபாத்திரம் பாராட்டும் படியாக அமைந்தது.இந்நிலையில் சிவகார்த்திகேயன் உடன் நெருக்கிய நண்பராக இருக்கும் பிரியங்கா மோகன் சினிமா தொடர்பான பல விஷயங்களை அவரிடம் ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நடிகர் தனுஷ் அவருடை படத்தில் நடிக்க தன்னை அணுகிய விவரத்தை சிவகார்த்திகேயனிடம் தெரிவிக்க, அதற்கு உங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது என பாராட்டிய சிவகார்த்திகேயன், தொடர்ந்து தனுஷ் குறித்து சில விஷயங்களை தெரிவித்து, உங்கள் சினிமா வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்க வேண்டாம் என்று பிரியங்கா மோகனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனுஷ் புதிய படத்தில் நடிக்க பிரியங்கா மோகன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சினிமா துறையினர், தனுஷ் விரித்த வலையில் பிரியங்கா மோகனை சிக்காமல் தப்பிக்க வைத்து. தனுஷ்க்கு ஆப்பு வைத்துவிட்டார் சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?