சங்கர் மகள் மூலம் சங்கரை வளைத்து போட பிளான் போட்ட சிவகார்த்திகேயன்…

0
Follow on Google News

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் விருமன். இந்த படத்தில் இடம்பெற்ற மதுரை வீரன் பாடல் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றுள்ளார் அதிதி சங்கர். மருத்துவம் படித்து முடித்த அதிதி சங்கர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு முறையான நடனம், பாடல், நடிப்பு என அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்து சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

அதனால் அவர் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் இவருடைய நடிப்பை பார்த்தவர்கள், அதிதி சங்கருக்கு இது முதல் படமா.? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மிகச் சிறப்பாக அவருடைய நடிப்பு இருந்தது. அதிதி சங்கர் நடித்த விருமன் படம் வெளியாவதற்கு முன்பே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்பொழுது மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் அதிதி சங்கர்.

ஒரு நடிகையின் முதல் படம் வெளியாகி, அந்த படத்தில் நடித்த அந்த நடிகைக்கு வரவேற்பு எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்து தான், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும், அதே போன்று முந்தைய படத்தின் வரவேற்பை பொறுத்து அவருடைய சம்பளமும் உயர்த்தப்படும். ஆனால் அதிதி சங்கர் நடிப்பில் வெளியான விருமன் படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தில் அதிதி சங்கர் ஒப்பந்தமானதின் பின்னணி குறித்த சில தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மிக விரைவில் 25 ஆவது படத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன், அந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற விருப்பம் சிவகார்த்திகேயனுக்கு இருந்துள்ளது. அதன் அடிப்படையில் சங்கர் மகளுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பை கொடுத்து, தன்னுடைய 25ஆவது படத்தை சங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கான சிவகார்த்திகேயனின் திட்டம் தான் இது என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிப்பில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார் சங்கர். இதன் பின்பு வரலாற்று கதையான வேல்பாரி படத்தை மிக பிரமாண்டமாக எடுக்க உள்ளார் சங்கர். இந்த படம் பல பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள சங்கர், இந்த படத்தை எடுத்து முடிக்க சுமார் 5 வருடங்கள் செலவிட முடிவு செய்துள்ளார் சங்கர்.

இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வேல்பாரி படத்தை எடுப்பதற்கு முன்பு சங்கர் ஒரு கமெர்சியல் படம் எடுக்கும் திட்டமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது மாவீரன் படப்பிடிப்பில் இருக்கும் சிவ கார்த்திகேயன், அந்த படத்தில் நடிக்கும் சங்கர் மகள் அதிதி சங்கர் உடன் தன்னுடைய நகைச்சுவை பேச்சினால், இருவரும் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தான் நடிக்கும் 25 படத்தை சங்கர் சார் இயக்க வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை அதிதி சங்கரிடம் தெரிவித்து, நீங்க தான் அப்பாவிடம் பேசி எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவித்துள்ளார், இந்த தகவல் மகள் அதிதி சங்கர் மூலம் சங்கர் கவனத்திற்கு சென்றதாகவும், ஆனால் சிவகார்திகேயனை வைத்து இயக்குவது குறித்து சங்கர் முடியும்,முடியாது என எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லையாம்.