மானம் மரியாதையெல்லாம் போச்சே… சிவகார்த்திகேயன் வீட்டில் வெடித்த பிரச்சனை…

0
Follow on Google News

பேராசையின் காரணமாக சொந்தமாக படம் தயாரித்து, தொடர் தோல்விகளை சந்தித்து சுமார் 100 கோடி வரை கடனாளியான சிவகார்த்திகேயன். தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போது, தலா 25 கோடி விதம் கடனை தவணை முறையில் அடைத்து விடுவதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து சொன்னபடி டாக்டர் படம் வெளியான பின்பு முதல் தவணையாக 25 கோடி ரூபாய் கடனை கொடுத்த சிவகார்த்திகேயன்.

அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான டான், பிரின்ஸ், மாவீரன் போன்ற படங்கள் வெளியான பின்பு சொன்ன படி வாங்கிய கடனை திருப்பி தராமல், ஒவ்வொரு முறையும் கடன் கொடுத்தவர்களை சாக்கு போக்கு சொல்லி ஏமாற்றி டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து தன்னுடைய படங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் வெவ்வேறு தொழிலில் முதலீடு செய்து வரும் சிவகார்த்திகேயன்.

கடன் கொடுத்தவர்களை டீலில் விட்டு விடுகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேர்மையாக வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்நேரம் முழு கடனையும் அடைத்து இருப்பார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறிதும் அவருக்கு இல்லை அதனால் தான் தொடர்ந்து கடன் கொடுத்தவர்களை ஏமாற்றி வருவதாக கூறப்படும் நிலையில், தற்பொழுது சிவகார்த்திகேயனுக்கு கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து எல்லாம் பக்கமும் செக் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அயலான் படம் ரிலீஸ் ஆன பின்பு கிடைக்கும் லாபத்தில் கடனை அடைத்து விடுகிறேன் என சிவகார்த்திகேயன் உறுதியளித்து இருந்துருகிறார். ஆனால் சிவகார்த்திக்கேயன் இமான் மனைவி விவகாரத்தில் சிக்கி சின்னாம்பினமாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவருடைய இமேஜ் மிக பெரிய டேமேஜ் ஆகியுள்ளது. இதனால் விரைவில் வெளியாக இருக்கும் அயலான் மக்கள் மத்தியில் புறக்கணிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது.

இமான் விவகாரம் வெளியே வந்த பின்பே, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் பத்திரிகையாளர்கள் கேள்வி கேள்வி கேட்டு மேலும் தன்னுடைய மானத்தை காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள் என்பதால்.பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது.இந்த நிலையில் சிவகார்திகேயன் – இமான் விவகாரம் சிவகார்த்திகேயன் உறவினர் மத்தியிலும் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் மிக பெரிய அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்தில் கூட தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் சொந்த காரர்கள் பார்த்தால் எள்ளி நகையாடிவிடுவார்கள் என்பதால் எந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார் சிவகார்த்திகேயன், அதே போன்று சிவகார்த்திகேயன் மனைவியும் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டால், என்ன உன் கணவர் பற்றி எதோ சொல்கிறார்களே உண்மையா என சொந்தம் பந்தங்கள் கேட்பார்கள் என்பதால், சிவகார்த்திகேயன் மனைவியும் சமீப காலமாக வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிலே முடங்கியுள்ளாராம்.

மேலும் இமான் விவகாரம் சிவகார்த்திகேயன் குடும்பத்திலும் சில சலசலப்பை ஏற்படுத்தியதாகவும், இருந்தாலும் ஒரு வழியாக அதை சமாளித்து வரும் சிவகார்த்திகேயன், பெரும்பாலும் யார் தொலைபேசியில் அழைத்தாலும் போன் எடுப்பதே இல்லையாம், அந்த வகையில் தற்பொழுது ஒரு பக்கம் கடன் காரர்கள் நெருக்கடி, ஒரு பக்கம் சொந்தம் பந்தம் காரி துப்பும் அளவுக்கு இமான் விவகாரத்தில் மனம் காற்றில் பறக்கிறது, என மனம் உடைந்த சிவகார்த்திகேயன் இதுவும் கடந்து போகும் என்கிற நம்பிக்கையில் இருந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..