சரத்பாபு மரணம்… சக நண்பர் மரணத்தில் கூடவா கமல்ஹாசன் இப்படி செய்யனும்…

0
Follow on Google News

சமீப காலமாக நடிகர் கமல்ஹாசனுக்கு மிக நெருக்கமான சினிமா துறையினர் தொடர்ந்து மரணம் அடைந்து வருவது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் காமெடி நடிகர் மயில்சாமி சமீபத்தில் மரணம் அடைந்தார். மயில்சாமி மறைந்த போது பெங்களூரில் அண்ணனின் 80வது சதாபிஷேகம் நிகழ்ச்சியில் இருந்த ரஜினிகாந்த், மயில்சாமி இறந்த செய்தி கேள்விப்பட்டு, உடனே சென்னை வந்து நேரில் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த்.

பிப் 20ம் தேதி மயில்சாமி உடல் அவருடைய வீட்டில் இருந்து எடுத்து செல்ல பட்டது. அப்போது மயில்சாமி வீடு அருகில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சில நிமிடங்கள் செலவு செய்து மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை கமல்ஹாசன். மேலும் மயில்சாமி இறந்த 19ம் தேதி சில காரணகளால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கிடையாது என முக்கூட்டியே பட குழுவுக்கு தெரிவித்து இருந்தார் ஷங்கர்.

இந்த நிலையில் 19ம் தேதி படப்பிடிப்பு இல்லை என்பதால், கமல்ஹாசன் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவார் என பலரும் எதிர்பார்க்க, கிடைத்த அந்த கேப்பில் ஈரோடு இடைதேர்தல் பிரச்சாரத்து சென்று விட்டார் கமல்ஹாசன். மயில்சாமி வீட்டில் இருந்து வரும் மீன் குழம்பை கமல்ஹாசன் ருசித்த சாப்பிடும் அளவுக்கு மயில்சாமி – கமல்ஹாசன் இருவருக்கும் நெருக்கமாக உறவு உண்டு.

இதே போன்று நடிகர் கமல்ஹாசனின் ஆரம்ப கால நண்பராக இருந்தவர் மனோபாலா. அந்த கால கட்டத்தில் தினமும் மாலை நேரங்களில் கமலஹாசன் வீட்டில் மனோபாலா, கமலஹாசன் அவருடைய இரண்டு சகோதரர்கள் சந்திரஹாசன், சாருஹாசன், மற்றும் சந்தான பாரதி, மணிரத்தினம் போன்றவர்கள் அங்கே அரட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

ஆனால் தன்னுடைய ஆரம்பகால நண்பராக இருந்த மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் நெருக்கிய நண்பரான சரத்பாபு மரணம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட சினிமா நட்சத்திரங்கள் நடிகர் சரத்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

ஆனால் சரத் பாபு மறைவு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத கமல்ஹாசன் தனது டிவீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஏன் வரவில்லை என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளது தான் பலருக்கு கமல்ஹாசன் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சரத்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகை சுஹாசினி. நடிகர் கமல்ஹாசன் ஏன் சரத்பாபு மறைவுக்கு வரவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், கமல் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார், கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் மேக்கப் போட்டுள்ளார். அதனுடன் வெளியே வர முடியாது என்பதால் தொலைபேசி வாயிலாக பேசினார் என்று சுஹாஷினி பேசியிருந்தார். அதாவது இந்தியன் 2 படத்தின் மேக்கப்பில் இருப்பதால் கமல்ஹாசனால் சரத்பாபு மறைவுக்கு வரவில்லை என சுஹாசினி தெரிவித்துள்ளது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேக்கப்பை கலைத்துவிட்டு சரத்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கலாம் கமல்ஹாசன் என்றும், சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த முதல்வர் சித்தராமையா பதவி ஏற்பு விழாவுக்கு சென்ற கமல்ஹாசன், சரத்பாபு மறைவுக்கு வருவதற்கு நேரம் இல்லையா.? அவர் சார்ந்த சினிமா துறையை சேர்ந்த ஒருவர் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதை சக கலைஞனுக்கு வேறு என்ன வேலை என சினிமா ரசிகர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.