இனி எனக்கு அண்ணன் ஷாருக்கான் அண்ணா தான்.. விஜய்க்கு குட் பை சொன்ன அட்லீ

0
Follow on Google News

ராஜா ராணி படத்தில் முலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் அட்லீ முதல் படத்திலே மிக பெரிய ஹிட் கொடுத்து அவருக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார். அடுத்து விஜய் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்து இரண்டாவது படமான தெறியும் மிக பெரிய ஹிட் கொடுத்து விஜய்க்கு விருப்பமான இயக்குனரானார் அட்லீ.

தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இயக்கிய அட்லி அதில் தெறி படம் தவிர்த்து மற்ற இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தினார். கடந்த பத்து வருடத்தில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ள அட்லீ. முதல் இரண்டு படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தது. விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மெர்சல் மற்றும் பிகில் ஆகிய இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.

மெர்சல், பிகில் போன்ற படங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை மீறி, பணத்தை வீண் விரையம் அட்லீ செய்தது தான் என கூறப்பட்டது. வியாபார ரீதியில் அட்லீ இயக்கும் படம் தோல்வியை தழுவினாலும் கூட தொடர்ந்து அடுத்தடுத்து அட்லீக்கு விஜய் வாய்ப்பு கொடுக்க காரணம், விஜய்யை சாதுர்யமாக அட்லீ காக்க பிடித்து வந்தது தான்.

மேலும் விஜய் அவருடைய படத்தில் மீண்டும் அட்லீக்கு வாய்ப்பு கொடுக்க தயக்கம் காட்டி வந்தாலும் கூட, விஜய் மனைவி சங்கீதாவை அண்ணி அண்ணி என்று காக்க பிடித்து அவர் மூலம் விஜய் படத்தின் வாய்ப்பை பெற்று விடுவாராம் அட்லீ. இந்த நிலையில் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் விஜய் கமிட்டாகி இருந்த நிலையில். திடீரென்று அட்லியை தன்னுடைய ப்ராஜெக்ட் இருந்து கழட்டி விட்டுள்ளார் விஜய்.

இதற்கு முக்கிய காரணம் அட்லி மீது தயாரிப்பாளர்கள் கூறும் புகார்கள் தான். அட்லி இயக்கத்தில் நடிக்க விஜய் முன்வந்தாலும் கூட பல தயாரிப்பு நிறுவனம் யாரும் அட்லீ இயக்கும் படத்தை தயாரிக்க முன்வரவில்லை. இதனால் தன்னால் தயாரிப்பாளருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அட்லியை கழட்டி விட்டுள்ளார் விஜய்.

இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லி, இதற்கு முன்பு விஜயை காக்கா பிடித்த அதே வித்தையை சாருக்கானிடமும் பின்பற்றி வருகிறார். மேலும் விஜய் இயக்கத்தில் அட்லி முதன் முதலில் இயக்கிய தெறி படம் வெற்றியடைந்து அடுத்தடுத்து எப்படி விஜய் அட்லிக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்தாரோ. அதேபோன்று ஜவான் படம் வெற்றி பெற்று அடுத்தடுத்து தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை ஷாருக்கான் தருவார் என்கின்ற நம்பிக்கையில் ஷாருக்கானை காக்கா பிடித்து வருகிறாராம் அட்லீ.

மேலும் தமிழ் சினிமாவில் தனக்கு வாய்ப்பு கொடுத்து வந்த ஒரே நடிகர் விஜயும் தற்பொழுது அவருடைய படத்தில் இருந்து தன்னை வெளியேற்றிய நிலையில். இனி தமிழ் சினிமாவில் தனக்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து இந்தி சினிமா பக்கம் தன்னுடைய பார்வை திருப்பியுள்ளார். சுமார் 30 கோடி ரூபாயில் மும்பையில் புதிய பங்களா வாங்கியுள்ள இயக்குனர் அட்லி அந்த பங்களாவிற்கான இன்டீரியர் வேலையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

அந்த இன்டீரியர் வேலை நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு அட்லி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை காக்கா பிடித்து விஜய் பட வாய்ப்பை பிடித்து வந்தது போன்று. ஷாருக்கான் மனைவி கவுரியை காக்க பிடித்து கூஜா தூக்க தொடங்கியுள்ளார் என்கிறது மும்பை வட்டாரங்கள். அந்த வகையில் இதற்கு முன்பு எங்க அண்ணா விஜய அண்ணா என்ற அட்லீ தற்பொழுது பச்சோந்தி போன்று எங்க அண்ணா ஷாருக்கான் தான் என்று மாறினாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது.