6 வயது மூத்த நடிகையுடன் காதல்…நண்பர்கள் சொல்லியும் கேட்காத சரத்பாபு..

0
Follow on Google News

பிரபல தமிழ் சினிமா நடிகர் சரத்பாபு உடல் நல குறைவினால் ஹைதராபாதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் அண்ணாமலை, முத்து போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மிக பிரபலமாக அறியப்பட்ட சரத்பாபு பற்றி பெரும்பாலும் மற்ற நடிகர் நடிகைகள் போன்ற தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகள் எதுவும் வெளியில் வராது.

இதற்கு காரணம், பெரும் பாலும் நடிகர் சரத்பாபு தேவையின்றி எந்த ஒரு விஷயத்திலும் தலையிடுவதில்லை, சினிமாவில் யாரையும் பகைத்து கொள்ளாமல் இருந்து வந்தவர் சரத்பாபு. இந்நிலையில் சரத்பாபு அவருடைய இளம் வயதில் பிரபல தெலுங்கு நடிகை ரமா பிரபாவை காதலித்து வந்துள்ளார். சரத்பாபுவை விட நடிகை ரமா பிரபாவுக்கு 6 வயது மூத்தவர்.

ஒரு கட்டத்தில் நடிகை ரமாபிரபாவை திருமணம் செய்ய சரத்பாபு முடிவு செய்த போது, சரத்பாபுவின் நெருங்கிய நண்பர்கள் உன்னை விட ஆறு வயதில் மூத்தவரான இந்த நடிகையை எதற்கு திருமணம் செய்ய போகிறாய்.? இதெல்லாம் சரியா வருமா என சரத்துபாபுக்கு அவருடைய நண்பர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால் நான் காதலித்த பெண்ணை எப்படி ஏமாற்ற முடியும் என நடிகை ரமாபிரபாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சுமூகமாக போன நிலையில் ஒரு கட்டத்தில் ரமாபிரபாவுக்கும் சரத்பாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்து குறித்து ரமாபிரபா அப்போது பேட்டி ஒன்றில் கூறுகையில, பிரபல வில்லன் நடிகர் நம்பியார் மகள் சினேகா நம்பியாருடன் சரத் பாபுக்கு தொடர்பு இருந்ததே எங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது என தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரை காதலித்து வந்த சரத் பாபு முதல் மனைவி ரமாபிரபாவை விவகாரத்து செய்த அடுத்த இரண்டு வருடத்தில் 1990ம் ஆண்டு சினேகா நம்பியாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நம்பியார் மகளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த சரத் பாபு அதன் பின்பு தீவிர ஐயப்ப பக்தரான மாமனார் நம்பியாரை பார்த்து அவரும் சபரிமலைக்கு செல்லத் தொடங்கினார்

குறிப்பாக சபரிமலைக்கு தமிழர்கள் பெரும்பாலும் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம் என் நம்பியார். இவர் தொடர்ந்து சபரிமலைக்கு போவதை பார்த்த பல சினிமா பிரபலங்கள் சபரிமலைக்கு செல்ல தொடங்கிய பின்பு தமிழக மக்களும் சபரிமலைக்கு பயணத்தை மேற்கொண்டார்கள். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பெரும்பாலானோர் சபரிமலை செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நம்பியார்.

அவரைப் பின்பற்றி சரத் பாபுவும் சபரிமலைக்கு தொடர்ந்து 2020 ஆம் வருடம் வரை சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் நம்பியார் மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் கடந்த 2011 ஆம் வருடம் சினேகா நம்பியாரை விவாகரத்து செய்தார் சரத் பாபு. இருந்தாலும் மாமனார் நம்பியார் வாங்கி கொடுத்த தி நகர் வீட்டின் மீது சரத்பாவுக்கு அதீத பற்று உண்டு எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் தொடர்ந்து தன்னுடைய கடைசி காலத்தில் தி நகர் வீட்டிலே வாழ்ந்து உயிர் விட வேண்டும் என விரும்பியுள்ளார் சரத்பாபு.

ஹைதராபாத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்த பொழுது தன்னுடைய உயிர் தி நகர் வீட்டிலே பிரிய வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து, அதனால் தன்னுடைய வீட்டில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மருத்துவர்கள் அது மிகவும் சிரமம் என மறுத்துவிட்டதால் ஹைதெராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்குமார் மருத்துவமனையிலே உயிர் பிரிந்தார்.