அமலாபால் வீட்டில் மருமகன் தனுஷ்…. அமலா பால் வீட்டிற்கு சென்று கோபத்தில் கொந்தளித்த ரஜினி…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் உடன் நடிக்கும் கதாநாயகிகள் பெரும்பாலும் தனுஷ் உடன் இணைத்து வைத்து கிசு கிசு செய்திகள் வெளியாகும். நடிகர் தனுஷின் நடவடிக்கைகளை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த பூனையும் பால் குடிக்குமா.? என தனுஷ் பற்றி வெளிவரும் கிசு கிசு செய்திகளை நம்புவதற்கு சற்று யோசிப்பார்கள். ஆனால் தனுசுக்கென்று ஒரு வித சில்மிஷங்களும் சேட்டைகளும் உள்ளது என்கின்றது சினிமா வட்டாரங்கள்.

இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடித்த போது, தனுஷ் – அமலாபால் இருவரையும் இணைத்து வைத்து கிசுகிசு செய்திகள் மிக பரவலாக வெளியானது. அந்த காலகட்டத்தில் அமலாபால் மற்றும் தனுசுக்கு இடையிலான கிசுகிசுக்கள் விவகாரம் தனுஷ் குடும்பத்தில் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால் தனுஷ் அவரது மனைவி இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் தனுஷ் வீட்டிற்கு வராமல் அமலாபாலுடன் அதிக நேரம் செலவழித்து செலவழித்து வருவதாகவும், அமலாபால் குடியிருக்கும் வீட்டிலே தனுஷ் செட்டிலாகிவிட்டதாக கூட கிசு கிசு செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து கணவர் தனுஷ் விவகாரத்தை தாய் லதா ரஜினிகாந்திடம் எடுத்து சென்றுள்ள ஐஸ்வர்யா, இது ரெம்ப நாளாக நடந்து வருகிறது என கணவர் தனுஷ் விவகாரத்தை தாய் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளார் ஐஸ்வர்யா.

பின்பு இந்த பிரச்சனையை ரஜினியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லதா ரஜினிகாந்த். மகள் ஐஸ்வர்யா குடும்ப பிரச்சனை எல்லை மீறி போய் விட்டது, இதற்கு உடனே எதாவது ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த ரஜினிகாந்த் மருமகன் தனுஷை நேரில் அழைத்து கண்டிக்காமல், நேரடியாக அமலாபால் குடியிருக்கும் அந்த அப்பார்ட்மெண்டுக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

அமலாபால் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த், மருமகன் தனுசுக்கு என்னுடைய மகளுடன் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. அவர் வேறு ஒரு பெண்ணின் கணவர். என் மகள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என ரஜினிகாந்த் நேரடியாகவே அமலாபாலை எச்சரித்ததாக சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேரடியாகவே அமலாபாலை எச்சரித்த பின்பு, எதற்கு தேவையில்லாத வேலை நமக்கு என, தனுஷை விட்டு அமலாபால் ஒதுங்கியுள்ளார். ஆனால் அப்போது பட வாய்ப்புகள் அதிகமாக அமலாபாலை தேடி வந்து கொண்டிருந்த காலத்தில், தனுசை விட்டு விலகினாலும் கூட ரஜினிகாந்த், அமலா பாலை எச்சரித்த பின்பு அமலாபாலுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

பெரும்பாலான இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அமலாபாலை கமிட் செய்ய முன்வரவில்லை, திடீரென தனக்கு ரெட் கார்டு விதித்தது போன்று சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் எப்படி போனது என குழம்பிப் போன அமலா பால். இதன் பின்னணியில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் இருப்பதை உணர்ந்துள்ளார். இந்த நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த அமலா பால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளுக்காக எல்லை மீறி கிளாமரில் இறங்கினார்.

மேலும் சொந்தமாக ஒரு படத்தையும் தயாரித்தார், இதில் அவருக்கு கிளாமரும் கைகொடுக்கவில்லை, சொந்தமாக தயாரித்த ஒரு படமும் தோல்வியை தழுவி, மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது. இதன் பின்பு சிலரால் நாம் திட்டமிட்டு சினிமாவில் பலி வாங்கப்பட்டோம் என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளான அமலாபால், தன்னுடைய மன அமைதிக்காக ஆன்மீகம் பக்கம் சென்றார். யோகா, ஆன்மீகம் என தன்னை முழுமையாக ஆன்மீகம் பக்கம் அர்ப்பணித்து கொண்ட அமலாபால், தனுசுடன் ஏற்பட்ட நெருக்கமே அவருடைய சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது என்கின்றனர் சினிமா துறையினர்.