மகள் இரண்டாவது திருமணத்திற்கு ரஜினி கடும் எதிர்ப்பு…டென்ஷனில் வெளியேறி எங்கே சென்றுள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இடையில் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு அந்த நிலையில், கடந்த 2022 வருடம் ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிக்கை வெளியிட்டு தற்போது வரை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவுக்கு பின்பு சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கு இரண்டு தரப்பில் இருந்தும் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.

இந்த நிலையில் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டப்படும் வீட்டின் கிரகபிரவேசம் அன்று தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இணைந்து புதிய வீட்டில் குடியேறுவர்கள் என பலரும் எதிர்பார்க்க பட்ட நிலையில், கிரக பிரவேசம் அன்று தனுஷ் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அவருடைய தாய் மட்டுமே கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த நிகழ்வில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, மாமனார் ரஜினிகாந்த், மாமியார் லதா ரஜினிகாந்த் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இருந்தும் தனுஷ் அவருடைய இரண்டு மகன்களுடன் அடிக்கடி பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, அதே போன்று தன்னுடைய இரண்டு மகன்களுடன் ஐஸ்வர்யா ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் இவர்கள் இருவரும் குழந்தைகள் எதிர்காலம் கருத்தின் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது, அதனால் தான் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெறாமல் இருந்து வருகிறார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்து சில வாரங்களாக ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவர் திருமணம் செய்ய கூடிய நபருடன் ரிசார்ட் ஒன்றில் ஐஸ்வர்யா இருந்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது தீடீரென நடிகர் ரஜினிகாந்த் மாலதீவ்ஸ் சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பொதுவாக வெளிநாடு அல்லது சுற்றுலாவாக எங்கே சென்றாலும் கூட மூத்த மகள் ஐஸ்வர்யா உடன் செல்வது வழக்கம், ஆனால் ரஜினிகாந்த் மாலதீவ்ஸ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் உடன் இல்லாமல் தனியாக சென்றுள்ளது பின்னனி குறித்து வெளியிட்டு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

தந்தை ரஜினிகாந்திடம், தான் உதவி இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குறித்து ஐஸ்வர்யா பேசியதாகவும், அதற்கு ரஜினிகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்தவர், சமீபத்தில் கூட தனுஷ் அவருடைய இரண்டு மகன்களை அழைத்து சென்று திருப்பதியில் மொட்டை போட்டுள்ளார், தொடர்ந்து மகன்கள் மேல் பாசமாக இருக்கிறார், அந்த பாசம் உன் மீதும் இருக்கும், விரைவில் நீங்கள் ஒன்றாக இணைந்து வாழ்வீர்கள் என ரஜினிகாந்த் தெரிவித்ததாகவும்.

மேலும் மகளின் இரண்டாவது திருமணம் முடிவு என்பது ரஜினிகாந்த சற்றும் எதிர்பார்க்காத முடிவு என்பதால், இதனால் கடுமையாக அப்செட்டான ரஜினிகாந்த், வீட்டில் இருந்தால் இது குறித்த சிந்தனை வரும் எனபதால், மனதிற்கு ஆறுதலாக மாலதீவ்ஸ் பயணம் சென்றுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே, ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசு கிசு வெளியான நிலையில்,

தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள தகவல் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் மருமகன் தனுஷ் மீது மிக பெரிய மதிப்பும் மரியாதையும் ரஜினிக்கு இருந்து வருவதால் மீண்டும் தணுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.