தமிழர்கள் என்ன அறிவில்லாதவர்களா.? என்ன நினைத்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த் மகள்…

0
Follow on Google News

கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்துள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை தன்யாவுக்கு எதிராக தமிழர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தான்யா, தமிழில் ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டில் CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டியின் போது, தமிழர்களை இழிவு படுத்தும் விதத்தில் ஒரு பதிவை அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் தான்யா, அதில் அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள். நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம்.

உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான பெங்களூர் நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள். அதையும் அனுமதிக்கிறோம். இப்படி கெஞ்சி கொண்டே இருக்கிறீர்கள் நாங்களும் தருகிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா!! என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தமிழர்களை இழிவு படுத்திய கர்நாடகாவை சேர்ந்த நடிகை தான்யாவுக்கு எதிராக தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்’ என அப்போது சபதமிட்டார்.

இந்நிலையில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்தை வெளியிட்ட நடிகை தாண்யா தற்பொழுது ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது அந்த படத்திற்கு எதிராக தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மேலும் மானமுள்ள தமிழ் சமூகம் லால் சலாம் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் தமிழர்கள் மத்தியில் ஒளித்து வருகிறது.

மேலும் தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தை வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஆணையரிடம் சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம் புகார் மனு அளித்திருந்தார். இதற்கிடையில் தமிழர்களை இழிவு படுத்திய நடிகை தன்யாவுக்கு தமிழ் படத்தில் வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு என்ன எகத்தாளம், தமிழர்களை இழிவு படுத்திய நடிகை தன்யாவுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளது தமிழர்களை அவமதிக்கும் செயல் என ரஜினி மகளுக்கு எதிராகவும் தற்பொழுது தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் தமிழர்களை இழிவு படுத்தும் விதத்தில் நடிகை தான்யா பதிவிடவே இல்லை என்றும் தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும்” மன்னிப்பு கேட்டு நைசாக எஸ்கேப்பாக முயற்சி செய்துள்ளார் தான்யா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்.. கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல.

12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன். அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த பதிவு நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அதை அதிகாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த சர்ச்சையினால் திரு.ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் தன்யாவின் இந்த அறிக்கைக்குக்கு தமிழர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள், தமிழர்கள் என்ன முட்டாளா? அன்று இழிவாக பேசிவிட்டு இன்று அந்த பதிவை நான் போடவே இல்லை என்று கூறினால் நம்ப முடியுமா.? லால் சலாம் படம் திரைக்கு வந்தால் நிச்சயம் மண்ணை கவ்வ வைப்பார்கள் தமிழர்கள் என்பதால், நடிகை தன்யாவை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் ரஜினிகாந்த் மகள் என கூறப்படுகிறது, மேலும் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று இழிவு படுத்திய தான்யா நடித்த லால் சலாம் படத்தை தன்மான உள்ள ஒவ்வொரு தமிழனும் புறக்கணிப்போம் என தமிழர்கள் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.