விலை உயர்ந்த டிஜிட்டல் லாக்கர்… நகைகளை திருடியவர்களுக்கு பாஸ்வேர்ட் எப்படி தெரிந்தது.?

0
Follow on Google News

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் இவரும் பிண்ணனி பாடகராக இருந்து வருகின்றவர், நடிகர் தனுஷ் உடன் நெருங்கிய நண்பரான விஜய் ஜேசுதாஸ் மிக நெருக்கமான குடும்ப நண்பர்களாக வலம் வந்தனர், நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா என இந்த இரண்டு குடும்பமும் ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

இரண்டு குடும்பத்தினரும், பல பொது நிகழ்ச்சியிகளில் ஒன்றாக பங்கேற்று மகிழ்ச்சியாக இருப்பதை அடிக்கடி பார்க்க முடியும், பின்னணி பாடகரான விஜய் யேசுதாசை தன்னுடைய மாரி படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் தனுஷ், மேலும் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த வருடம் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்த்து வந்த நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மகனின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைபடம் ஓன்று வெளியானது.

அந்த புகைப்படத்தில் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி தர்ஷனா இருவரும் இடம் பெற்று இருப்பார்கள், அந்த வகையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைவதற்கு அவர்களின் குடும்ப நண்பர்களான விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி தர்ஷனா இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைவதில் இழுபறி நீடித்தாலும், மகன் யாத்ரா பள்ளி விழாவில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி தர்சனா என கூறப்பட்டது.

அந்த அளவுக்கு தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரிடம் மிக நெருக்கமாக குடும்ப நண்பர்களாக இருந்து வருகின்றவர்கள் விஜய் யேசுதாஸ் அவரது மனைவி தர்ஷனா. இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போன புகாரில், ஐஸ்வர்யா வீட்டின் வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் இருவரும் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளார்கள்,

வேலைக்கார பெண் ஈஸ்வரி சிறுக சிறுக ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விஜய் யேசுதாஸுக்கு சொந்தமாக சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகளை கடந்த டிசம்பர் மாதம் அவரது மனைவி பார்த்துள்ளார், ஆனால் கடந்த மாதம் நகைகளை எடுக்க சென்ற போது லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை என விஜய் யேசுதாஸ் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

விஜய் யேசுதாஸ் வீட்டில் காணாமல் போன நகையின் மதிப்பு சுமார் 60 லட்சம் என்றும், லாக்கரை திறந்து திருடி சென்றவர்களை கண்டுபிடித்து தன்னுடைய நகையை மீட்டு தந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் யேசுதாஸ் மனைவி புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் அவர்களின் குடும்ப நண்பர்களான விஜய் யேசுதாஸ் ஆகியோர் இருவரின் வீட்டிலும் நகை திருடு போய் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை வைக்கப்பட்ட இடம் சாவி போட்டு திறக்கும் வகையில் இருக்கும் என்றும், அதனால் சாவி இருக்கும் இடம் நன்கு அறிந்த வீட்டின் வேலைகார பெண் நகைகளை சிறுக சிறுக திருடியுள்ளார். ஆனால் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை வைக்கப்பட்டுள்ள லாக்கர் நவீன டிஜிட்டல் லாக்கர் என்றும், அந்த லாக்கர் சரியான பாஸ்வேர்டு போட்டால் மட்டுமே திறக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் நகைகளை பாஸ்வேர்டு தெரிந்தவர்களால் மட்டுமே திருடி இருக்க முடியும் என்பதால், விஜய் யேசுதாஸ் மனைவி தர்சனா கொடுத்த தகவல் அடிப்படையில் விசாரணையை தீவிர படுத்தியுள்ள போலீசார்,வீட்டில் வேலை சய்த 3 பேர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய் யேசுதாஸ தற்போது ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுள்ளது குறிப்பிடதக்கது.