விஜய் இருக்கும் இடத்திற்கே வந்த ரஜினி… தெறித்து ஓடிய விஜய்… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

அண்ணாமலை தம்பி இங்க அட வந்தேன்டா என ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் ரஜினியின் புகழ் பாடி வளர்ந்தவர் விஜய் என்பது ஆரம்ப கட்ட சினிமாவை திரும்பி பார்த்தால் தெரிந்து விடும், அந்த வகையில் ரஜினி புகழ் பாடினால், ரஜினிக்கு இருக்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் தங்கள் படத்தை பார்த்து வெற்றி அடைய செய்வார்கள், மேலும் ரஜினியின் பெயரை பயன்படுத்தி நாமும் உச்சத்திற்கு சென்று விடலாம் என முயற்சியில் ஈடுபட்ட பல நடிகர்களில் விஜய்யும் ஒருவர் என்பது மறுக்க முடையதா விஷயம்.

ஆனால் உச்சத்திற்கு வந்த விஜய் தன்னுடைய போட்டியாளராக ரஜினியை முன்னிறுத்தி, ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் சீண்டும் வகையில் செய்த செயல்கள் சமீப காலமாக பற்றி இருக்கிறது, அதில் ஓன்று சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை. தொடர்ந்து விஜய் தரப்பில் இருந்து ரஜினியை சீண்ட, பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா- கழுகு கதை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல விஜய் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பது மட்டுமல்லாமல், நடிகர் விஜயே லியோ சக்ஸஸ் மீட்டில் மறைமுகமாக பல விஷயங்களை தெரிவித்து இருந்தார். அதாவது ஒரே சூப்பர் ஸ்டாரா ரஜினி தான் என இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தாலும், காக்கா – கழுகு என பேசி மீண்டும் ரஜினியை சீண்டும் வகையில் இருந்தது விஜய்யின் லியோ சக்சஸ் மீட் பேச்சு.

இந்நிலையில் ரஜினி – விஜய் இருவருக்குமான மோதல் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், ரஜினி – விஜய் இருவரும் சந்திக்கும் ஒரு சூழல் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது.ஆனால் விஜய் ரஜினியை எந்த சூழலிலும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக சிறுபிள்ளைத்தனமாக ஒரு செயலை விஜய் செய்துள்ளது சினிமா வட்டாரத்தில் மிக பெரிய பரபரபரப்பாக பேசப்படுகிறது.

ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் ராஜாவின் இயக்கத்தில் அவரது 170 ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்ததை தொடர்ந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம், நடிகர் விஜயும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் அதே பிரசாந்த் ஸ்டூடியோவில் தான் நடந்து வருகிறது.

இப்படியான நிலையில், ரஜினி படத்தின் ஷூட்டிங்கும் பிரசாந்த் ஸ்டூடியோவில் திட்டமிடப்பட்டிருப்பது விஜய் காதுக்கு சென்றுள்ளது. ஸ்டூடியோவிற்கு ரஜினிகாந்த் வரப்போகிறார் என்று தெரிந்ததும், விஜய் உடனடியாக அவரது படத்தின் ஷூட்டிங்கை கோகுலம் ஸ்டுடியோக்கு மாற்றி இருக்கிறார். ரஜினியை நேரில் பார்க்க விருப்பமில்லை என்றும், அதனாலேயே ஷூட்டிங்கை வேறொரு ஸ்டுடியோவிற்கு மாற்றி இருக்கிறார் விஜய் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த், பிரசாந்த் ஸ்டூடியோவில் விஜயின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் வர சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆகவே, ரஜினியின் மனதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ரஜினி பெருந்தன்மையாக உள்ளார் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பலர் விஜய் வழக்கம் போல அதே இடத்தில் ஷூட்டிங் வைத்திருந்தால், இரண்டு பேரும் நேரில் சந்தித்து இதுவரை ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்துக்கும் ஒரு தீர்வு கிடைத்திருக்க கூடும். ஆனால் வயதில் மூத்தவரான ரஜினிகாந்த் சம்மதித்த போதிலும், நடிகர் விஜய் ரஜினியை பார்க்க விரும்பாமல் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார் என்றால், விஜயின் பக்கம் தான் பிரச்சனை இருக்கிறது என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.