அசைக்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டார்… வயதான பப்லுவை விட்டு பிரித்த இளம் மனைவி வேதனை…

0
Follow on Google News

சீரியல் நடிகர் பப்லு பிரிதிவிராஜ் குழந்தை நட்சதிரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பிரிதிவிராஜ், தன்னை விட 24 வயது குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார், 56 வயதுடைய பிரிதிவிராஜ் தன்னுடைய புதிய இளம் மனைவியுடன் தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் இந்த வயதில் இது தேவையா என பலரும் விமர்சனம் செய்ய, காதலுக்கு வயதில்லை என்று பதிலளித்த பப்லு, “எனது முன்னாள் மனைவி தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால் தான் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியானேன். இன்று நான் செய்வதை எத்தனை ஆண்களால் செய்ய முடியும். நான் திறமையாக இருப்பதால் இதைச் செய்கிறேன். உங்களால் தாங்க முடியலனா இருக்கட்டும். உங்களுக்கு எரியுதா? எரியட்டும்.” என தன்னைவிட 24 வயது குறைவான புது காதலி கிடைத்த போது பேசிய பப்லு.

பேட்டி ஒன்றில் பொம்பள சோக்கு கேக்குதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பப்லு பிரித்விராஜ், தேவை என்று கூறினார். மேலும் பணத்திமிரால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறீரா என கேட்டதற்கு, ஆம் பணத்தால் தான் முதலில் பணத்தை சம்பாதித்து பின் விருப்பம் போல் வாழலாம்.” என்று இளம் மனைவி கிடைத்த சந்தோஷத்தில் பேட்டி கொடுத்து வந்தார் பப்லு.

இந்த நிலையில் சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள். மேலும் மூன்று புகைப்படங்கள் மட்டும்தான் பப்லுவோடு எடுத்த புகைப்படத்தை சீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கிறார். அதிலும் பப்லு பக்கத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தான் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மட்டும் தான் டெலிட் ஆகவில்லை.

இதனால் வயதான அங்கிள் பப்லுவின் இளம் மனைவி கழட்டி விட்டுட்டு போய்ட்டார் என பலரும் கமெண்ட் செய்து வந்த நிலையில், இளம் மனைவி ஷீத்தல் பிரிவு குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த பப்லு, இவ்வளவு நாள் நான் ஏமாந்துவிட்டேன். இனியும் அவளை நம்பி நான் ஏமாறப்போவதில்லை… என்னுடைய வாழ்க்கையை நான் வாழப்போகிறேன் என தெரிவித்த பப்லு,

தனது 20 வயதில் தன்னுடன் பழகிய பெண் ஒருவர் இன்றும் போன் செய்து ‘பப்லு இன்னமும் நீ அழகாக இளமையுடன் இருக்கிறாய்’ என கூறியதாகவும் மேலும் தான் இன்றும் கண்ணனாகவே வாழ்கிறேன். அதனால் யார் என்னை விட்டு சென்றாலும் அதை பற்றி கவலை படபோவதில்லை… நான் ஒரு அழகான இளமையான தோற்றத்துடன் இருப்பதாகவும் தற்பெருமை பேசி குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பேசியுள்ளார்.

இந்நிலையில் பப்லுவை ஏன் அவரது இரண்டாவது மனைவி பிரிந்தார் என்கிற தகவலும் சினிமா வட்டாரதத்தில் கிசு கிசுக்க பட்டு வருகிறது. முதலில் திருமணம் செய்து கொள்கிறேன் என தெரிவித்து ஷீத்தல் உடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தியே வந்ததை தொடர்ந்து ஒரு கட்டத்தில் இவர் நம்மை ஏமாற்றுகிறார் என புரிந்து கொண்டு ஷீத்தல் பப்லுவை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

இப்போது திடிரென்று ஷீத்தல் நான் பப்லுவை விட்டு பிரிய காரணம் பப்லு ஆசைக்காக மட்டுமே ஷீத்தல்லை பயன்படுத்தி கொண்டார். திருமணம் செய்து கொள்வோம் என்று முதலில் கூறிவிட்டு பிறகு திருமணம் செய்யவே யோசித்தார். தன்னுடைய மகனையும் அப்படியே ஒரு பக்கம் வளர்த்துக்கொண்டும் இருந்தார். தன்னுடைய சுயநலம் பற்றி மட்டுமே பப்லு யோசித்து வந்தது ஷீத்தல்க்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை விட்டு ஷீத்தல் பிரிந்துவிட்டார் என சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.