அட இதுக்கு தான் பிரபு மகள் முதல் கணவரை விவாகரத்து செய்தாராம்.. பின்னனி இது தான் காரணமா.?

0
Follow on Google News

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான, இளைய திலகம் பிரபு. தமிழ் சினிமாவில் 80-களில் இருந்து தற்போது வரை பல தரமான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர். சமீப காலமாக ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களில், வலுவான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 , ராவண கோட்டம் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரபுவை தொடர்ந்து இவரின் மகனான விக்ரம் பிரபுவும் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா, கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை காதலித்து வந்த நிலையில், ஐஸ்வர்யா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்கும் இன்று மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்து, தனக்கான சரியான வாய்ப்பு கிடைக்காமல் இறுதிவரை இயக்குனராக முடியாமல் இருந்த ரவிச்சந்திரன் என்கின்ற உதவி இயக்குனரின் மகன் தான் ஆதிக் ரவிச்சந்திரன். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான “திரிஷா இல்லனா நயன்தாரா” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் இயக்குனராக களம் இறங்கினார்.

அதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்கின்ற திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனை எடுத்து சுமார் 6 ஆண்டுகள் கழித்து இந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா திரைப்படமும் பெரிய அளவில் செல்லாத நிலையில், எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்து வெளியான “மார்க் ஆண்டனி” திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

தற்போது இவருக்கும் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும் தான் திருமணம் நடந்தது. இதில் பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மேலும் பிரபல தொழிலதிபரும், நடிகருமான ‘லெஜெண்ட்’ சரவணன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். ஏற்கனவே ஐஸ்வர்யாவிற்கு பிரபு உறவினர் குணாலுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார்கள். பின் கருத்து வேறு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய என்ன காரணம்? என்பது குறித்து தற்பொழுது பேசியுள்ளார் பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன். அவர் கூறியதாவது, “பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை, அவருடைய சகோதரி தேன்மொழியின் மகனுக்குத் தான் திருமணம் செய்து வைத்தார்கள்.

அவருடைய பெயர் குணால், இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவருடைய சொத்துக்களை பிரிக்கும் பொழுது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரி தேன்மொழி ஆகியோருக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனை அடுத்து அண்ணன் பிரபு மீது சகோதரி தேன்மொழியும் வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

இந்த மனக்கசப்பு ஐஸ்வர்யா குடும்பத்திலும் தொற்றிக்கொள்ள அவர் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். மேலும் தற்பொழுது வெளிநாட்டில் வசித்து வரும் குணால் அவர்களும் தன் மாமா மீது உள்ள கோபத்தின் காரணமாக சட்டபூர்வமாக தனது மனைவி ஐஸ்வர்யாவிற்கு விவாகரத்து அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது” என்று அவர் கூறியுள்ளார்.