வாழும் கேப்டனாக பாகுபலி பிரபாஸ்… அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல் பிரபாஸ் பார்த்து தமிழ் நடிகர்கள் திருந்துவார்களா.?

0
Follow on Google News

அயோத்தியில் ராமர் கோவில் வரும் 22-ந் தேதி திறக்கப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழா நாடு முழுவதும் பெரும் உற்சாகமான திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரூ.1800 கோடி செலவில் கோவில் அமைப்பு, பலஆயிரம் கோடிகள் செலவில் உட்கட்டமைப்பு மாற்றம், புதுப்பிக்கப்பட்ட இரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம் என பல மாற்றங்கள் அங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்ந்து வரும் இந்துக்களால் எதிர்பார்க்கப்படும் ஸ்ரீ ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் சிலை நிறுவுதல் விழாவன்று, மக்கள் அயோத்தி வந்து செல்ல பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க நடிகர் பிரபாஸுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அயோத்திக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ராம பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது முதல் நாள் விருந்து செலவு அனைத்தையும் நடிகர் பிரபாஸ் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், வெளிநாட்டு அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவை ஓட்டி அயோத்தியில் சுமார் 300 இடங்களில் பக்தர்களுக்கு உணவளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், அன்று ஒரு நாள் விருந்து செலவு மட்டும் ரூ.50 கோடி வரை ஆகலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பான் இந்தியன் நடிகராக புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சலார்’. படம் வெளியான நான்கு நாட்களில் சுமார் 450 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராவணனை ராமன் வீழ்த்தும் ராமாயண புராண கதையை மையமாக வைத்து கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இப்படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் மற்றும் சீதாவாக கிருத்தி சனோன் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்றே சொல்லலாம்.

அன்னதானம் என்றால் முதலில் ரெபல் ஸ்டார் கிருஷ்ணம் ராஜு மற்றும் அவருடைய வாரிசான கிருஷ்ணம் ரெபல் ஸ்டார் பிரபாஸ் தான் நினைவுக்கு வருவார்கள். நடிகர்கள் மட்டுமில்லாமல் செட் பாய்ஸ் வரை என பலருமே பிரபாஸ் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு தான் செல்வார்கள். சூட்டிங் நேரத்திலும் கூட பிரபாஸ்க்கு தனியாக சாப்பிடும் பழக்கம் கிடையாது.

மதிய உணவு என்றாலே ஷூட்டிங் லொகேஷன் நண்பர்கள், படக்குழுவினர்கள் என அனைவரையுமே ரெபெல் ஸ்டார் படக்குழுவினர்கள் ஆர்டர் செய்து அன்றைய எல்லா செலவையும் அவர்தான் பார்த்துக் கொள்வார். அன்று ஒரு நாளே இரண்டிலிருந்து மூன்று லட்சம் வரை செலவு செய்வாராம். கிருஷ்ணம் ராஜூவின் மறைவுக்கு பிறகு பிரபாஸும் பேட கர்மா தினத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு சாப்பாடு வழங்குவாராம்.

அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் போன்று அனைவரையும் சமமாக அமர வைத்து வயிறார சாப்பிட வைத்து அழகு பார்க்கும் பிரபாஸ் ,தற்போது அயோத்தியில் 50 கோடி ரூபாய் செலவு செய்து அண்ணதானம் செய்ய இருக்கும் தகவல் .பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.