ஜோதிடர் சொல்ல சொல்ல கேட்காத மாரிமுத்து… இப்ப என்ன நடந்துச்சு பாத்திங்களா.?

0
Follow on Google News

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 57, டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உதவி இயக்குனர் முதல் நடிகர் வரை வெள்ளித்திரையில் கலக்கி சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்த மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது இயக்குநர் திருச்செல்வத்தின் ‘எதிர் நீச்சல்’ தொடர்.

ஆணாதிக்கம் நிறைந்த ஒரு கரடு முரடான மனிதராக எப்போதுமே கர்வமாக அனைவரையும் தனக்கு கீழே வைத்திருக்கும் கேரக்டராக ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்து வந்தார் என சொல்வதை காட்டிலும் வாழ்ந்து வந்தார் மாரிமுத்து என்றே சொல்ல வேண்டும். உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தி எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் நடிகர் மாரிமுத்து.

கடந்த சில மாதங்களாக புகழின் உச்சாணிக்கொம்பில் மிகவும் ட்ரெண்டிங் பர்சனாக இருந்து வந்தார் மாரிமுத்து. குறிப்பாக சீரியலில் அவர் பேசும் “இந்தாம்மா ஏய்!” அவரின் அடையாளமாகவே மாறியது.
சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்து ஜோதிடத்திற்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அங்கு நவீன ஜோதிட பரிகாரங்கள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போது நான் இதை எல்லாம் நம்பவே மாட்டேன் மாண்புமிகு முதலமைச்சர் ஆக மாட்டார் என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் அவர் அவர் இப்போ முதலமைச்சர் ஆகிவிட்டார். இப்போ அந்த ஜோதிடர்கள் எல்லாம் மூஞ்சியை எங்க கொண்டு வச்சுக்குவாங்க? இந்த நாடு நாசமா போறதுக்கு காரணமே ஜோதிடமும் ஜோதிடர்களும் தான் என்று ஒருமையிலும் மாரிமுத்து பேசியிருந்தார்.

அது குறித்து அந்த நேரத்தில் அரங்கத்திலும் பல ஜோதிடர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மேலும் எந்த ஒரு ஜோதிடராவது 2004 சுனாமி வரும் என்று சொன்னார்களா? 2015 ஆம் ஆண்டு சென்னையில் சுனாமி வரும் என்று சொன்னார்களா? 2020 கொரோனா வரும் என்று சொன்னார்களா? அவர்களை எல்லாம் மன்னிக்கவே முடியாது. இந்த நாட்டை பினோக்கி அழைத்து செல்வது இந்த ஜோதிடர்கள் மட்டும் தான். என்றும் அவர் கூறியிருந்தார்.

அதற்குப் பிறகு மாரிமுத்துவிற்கு எதிராக பல போலீஸ் கம்ப்ளைன்ட்களும் கொடுத்திருந்தனர். தற்போது இவர் ஜோதிடத்தை எதிர்த்து பேசியதால்தான் இவருக்கு இப்படி ஆகி விட்டதோ என்ற கருத்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவுக்கு இடுப்புக்கு மேலே பிரச்சினை உள்ளது என கூறியுள்ளார். அதற்கு மாரிமுத்து வழக்கமாக நக்கலாக பேசுவது போல இடுப்புக்கு மேலே இதயம் துடித்து கொண்டு இருக்கிறது என கூறியிருந்தார்.

இதை சுட்டி காட்டி இணையவாசிகள் அந்த ஜோதிடர் அன்று சொன்னது உண்மை தானோ? அன்று ஜோதிடத்தை பழித்ததால் தான் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது என இணையத்தில் சில வலைத்தளங்கள் மாரிமுத்துவின் இறப்பு குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் ஒருவர் உயிருடன் இல்லாதபோது அவர் பற்றி இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் எனவும் பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இணையத்தில் பரவி வரும் இந்த தகவலுக்கு சம்பந்தப்பட்ட அந்த ஜோதிடர் விளக்கமளித்துள்ளார். நடிகர் மாரிமுத்து தனது கருத்தை தெரிவித்ததில் என்ற ஒரு தவறும் இல்லை. அந்த டாபிக் பற்றி பேசியதால் டென்ஷனாகிவிட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்து மன்னிப்புக் கேட்டு கொண்டார். அவர் இறந்த செய்தி மிகவும் வருத்தத்தை கொடுத்தது என்றுள்ளார் அந்த ஜோதிடர்