லிங்குசாமியை நடு தெருவில் நிறுத்திய இருவர்..! பாவம்யா.. லிங்குசாமி என்ன செய்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் லிங்குசாமி இயக்கிய பல படங்கள் வெற்றி படங்களாக இடப்பெற்று,வெற்றி பட இயக்குனர் என்ற பெயருடன் ஒரு காலத்தில் சினிமாவில் வலம் வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனந்தம் படத்தில் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி முதல் படமே மிக பெரிய வெற்றியை அவருக்கு தேடி தந்தது, குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக அமைந்தது லிங்குசாமியின் ஆனந்தம் திரைப்படம்.

இதனை தொடர்ந்து மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய இரண்டாவது படம் ரன். இந்த படம் இளைஞர் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இயக்குனர் லிங்குசாமியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது. தொடர்ந்து சண்டக்கோழி, பீமா, வேட்டை, பையா போன்ற வெற்றி படங்களை இயக்கி வந்த லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது.

சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்துக்கு பின்பு அட்ரஸ் இல்லாமல் காணமல் போன இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி 2 படம் இதற்கு முன்பு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் திரைப்படம் மிக பெரிய தோல்வியை தழுவியதால் சண்டக்கோழி 2 திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் மண்ணை கவ்வியது. இதன் பின்பு லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து இயக்குனர் பணியை கைவிட்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் லிங்குசாமி, ஆரம்ப கட்டத்தில் லிங்கசாமி தயாரித்த படங்கள் வெற்றி பெற்று வந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரித்து மிக பெரிய நஷ்டத்தை சந்தித்தார் லிங்குசாமி, அந்த நஷ்டத்தில் இருந்து எழுந்து வருவதர்க்கு போராடிய லிங்குசாமி பொருளாதார ரீதியில் மிக பெரிய அளவில் கஷ்டப்பட்டு மெல்ல மெல்ல தற்பொழுது தான் மீண்டு வருகிறார்.

இந்நிலையில் வெற்றி இயக்குனராக வலம் வந்த லிங்குசாமி அஞ்சான் படத்தை தயாரித்து இயக்கிய பின் தனது சினிமா வாழ்க்கையை இழந்தவர், அதன் பின் கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரித்து மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு நடுதெருவில் நிற்கும் நிலைமைக்கு லிங்குசாமி தள்ளப்பட்ட நிலையில், லிங்கசாமியின் இந்த நிலைக்கு காரணமான நடிகர்கள் சூர்யா மற்றும் கமல்ஹாசன் இருவரும் கண்டு கொள்ளவில்லை.

இதன் பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படத்தை தயாரித்து ஓரளவு பொருளாதாரத்தில் எழுந்து வந்த லிங்குசாமி, அதன் பின்பு சுமார் 6 வருடங்களுக்கு பின்பு தற்பொழுது மீண்டும் படம் தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். மேலும் சமீபத்தில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கிய லிங்குசாமி, அந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

கள்ள காதல் விவகாரம்…. அடி தடியில் முடிந்த ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை..! என்ன நடந்தது தெரியுமா.?