மன்னிப்பு கேட்க வைத்த கமல்ஹாசன்… சகஜமாக எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் காலங்கள் கடந்து இன்றும் நிலைத்து நிற்கிறது. நடிகர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற ஆரம்ப கட்ட நகைச்சுவை நடிகர்கள் பெரும்பாலானவர் கவுண்டமணியின் நகைச்சுவையை பின்பற்றி அவரின் சாயல்கள் இவர்களிடம் இருப்பதை பார்க்க முடியும். கவுண்டமணி சினிமாவில் மட்டுமில்லை இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர். சாதாரணமாக பேசும் போது கூட அவரின் பேச்சில் நகைசுவை இருக்கும்.

மேலும், யாரையும் கூச்சப்படாமல் முகத்துக்கு நேராக அவர்களுக்கு கவுண்டர் கொடுக்கும் ஆள் தான் கவுண்டமணி. பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன் ஒருமுறை பிரம்மன் அவரை படைக்கும் போது, முகத்தை உருவாக்கும் போது மட்டும் பாதியிலே விட்டுவிட்டார் என கிண்டல் செய்தவர் கவுண்டமணி என கூறப்படுகிறது.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில் சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசன் உடன் கவுண்டமணி இணைந்து நடித்திருந்தார். அப்போதெல்லாம் உணவு சாப்பிட தனி கேரவன் கிடையாது. மரத்தடியில் சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். அப்படி படப்பிடிப்பு தளத்தில் ஒருமுறை கவுண்டமணி மற்ற நடிகர்கள் அனைவரும் மரத்தை சுற்றி அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கையில், ரசிகர் ஒருவர்,

கவுண்டமணியிடம், சார் இந்த படத்தில் உங்களுடன் செந்தில் நடிக்கவில்லையா.? என்று கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி இந்த படத்தில் வெள்ளை செந்தில் ஒருவர் நடிக்கிறார், அவர் பெயர் கமல்ஹாசன் என நக்கல் அடிக்க அந்த இடமே கல கல என்று சிரிப்பு சத்தம் சில நிமிடம் வரை நீடித்தது. இதை அங்கே இருந்த கமல்ஹாசன் அவமானமாக கருதினார். இதனால் டென்சனான கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தும் யாரிடமும் ஏதும் பேசாமல் சென்று விட்டார்.

உணவு இடைவேளை முடிந்து படப்பிடிப்பு தொடங்கிய போது கமல்ஹாசனை அங்கே காணவில்லை. இந்நிலையில் இளையராஜா தொடர்புகொண்டு கமல்ஹாசனிடம் பேசியுள்ளார்கள். நடந்ததை தெரிவித்து, கவுண்டமணி என்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என கமல்ஹாசன் பிடிவாதம் பிடித்துள்ளார். உடனே இசைஞானி இளையராஜா அவருடைய அண்ணன் பாஸ்கரை அழைத்து கவுண்டமணியிடம் பேச வலியுறுத்தியுள்ளார்.

பாஸ்கர் இது குறித்து கவுண்டமணியிடம் பேச.. அதற்கு என்னயா ..மன்னிப்பு தான ..கேட்கிறேன் என்று கவுண்டமணி தெரிவித்துள்ளார்.மறுநாள் கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காரில் வந்து இறங்க. அங்கே பலர் முன்னணியில், கமல் என்னை மன்னித்து விடுங்க, உங்களை வெள்ளை செந்தில் என்று அழைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்க, உங்களை வெள்ளை செந்தில் என்று அழைத்ததற்கு மன்னித்து விடுங்க என்று சத்தம் போட்டு நக்கலாக மன்னிப்பு கேட்க, கமல்ஹாசன் விடுங்க ..விடுங்க என்று படப்பிடிப்பை தொடங்கியதாக கூறப்படுகிறது.

அதே போன்று மன்னன் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி இருவரும் நடிக்கும் போது ரஜினியை வழக்கம் போல் வாயா … போய.. என்று பேசியுள்ளார் கவுண்டமணி. இதற்கு இயக்குனர் வாசு அப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் பேச கூடாது, அவர் இன்று மிக பெரிய சூப்பர் ஸ்டார், அவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என வாசு கவுண்டமணியிடம் பேசி கொண்டிருப்பதை கவனித்து கொண்டிருந்த ரஜினி அருகில் வந்துள்ளார்.

அப்போது கவுண்டமணி அண்ணன் எப்போதும் போன்று பேசட்டும், படத்திலும் அண்ணன் அப்படி பேசுவது தான் சரியாக இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் மிக பெரிய உயரத்துக்கு ரஜினி சென்றாலும் கூட ஆரம்பக்கட்டத்தில் எப்படி பேசினாரா அப்படியே கவுண்டமணி பேசட்டும் என ரஜினியின் பெருந்தன்மை பலரை வியப்படைய வைத்துள்ளது.