இளையராஜாவுக்கு தலைக்கனம், ஆணவமா.? நடந்த சம்பவத்தை போட்டுடைத்த சீரியல் நடிகை..

0
Follow on Google News

சமீப காலமாகவே இளையராஜா என்ன செய்தாலும் அது பெரும் சர்ச்சையாக வெடித்து, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றவர் இளையராஜா. மேலும் இளையராஜா குறித்து எதாவது சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்பு கிடைக்குமா.? அதை வைத்து இளையராஜா இமேஜை டேமேஜ் செய்வது மட்டுமின்றி, இது தான் வாய்ப்பு என்று இளையராஜாவை வசை படுவதற்கு என ஒரு தரப்பு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கு என்றே சொல்லலாம்.

சமீபத்தில் மனோபாலா மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்த விவகாரம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்து, அது பொது தளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இளையராஜாவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவதை பார்க்க முடிந்தது. என்னைப் பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் பிரிட்ஜை தாண்டுகின்ற நேரத்தில் எத்தனை மணிக்கு என்னுடைய கார் பிரிட்ஜை தாண்டுகிறது என்ற நேரத்தை பார்த்து அதே நேரத்தில் என்னை காரில் பார்ப்பதற்காக பாலத்தில் காத்திருந்த எத்தனையோ டைரக்டர்களில் மனோபாலாவும் ஒருவர் இளையராஜா பேசிய அந்த ஒரு வார்த்தை மிக பெரிய சர்ச்சையாக வெடித்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் இளையராஜா.

இந்நிலையில் இளையராஜா போன்றே, இதற்கு முன்பு பல சர்ச்சையில் சிக்கியவர் கவிஞர் சினேகன். இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படத்தில் கவிஞர் சினேகன் எழுதிய “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாடல் பட்டி தொட்டியெல்லாம் தூள் கிளப்பியது, இதன் பின்பு சினேகன் முக்கிய பாடலாசிரியராக அறியப்பட்டார், ஆனால் தனக்கு கிடைத்த பிரபலம் மூலம் சில விஷயங்களில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார், டைனமிக் திருமணம் என மணப்பெண்ணை திருமண நிகழ்வுக்கு வந்த ஆண்கள் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பது.

மணமகனை திருமணத்துக்கு வந்த பெண்கள் கட்டி பிடித்து வாழ்த்து தெரிவிப்பது என தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான சில விசயங்களில் ஈடுபட்டு தனது பெயரை பஞ்சராக்கி கொண்டார் சினேகன். இந்நிலையில் தன்னை விட 19 வயது குறைவான தொலைக்காட்சி தொடர் நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பின் சினேகன் தனது மனைவியுடன் இணைந்து ரீல்ஸ் உள்ளிட்ட பலவீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் 80-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவரை நேரில் சந்தித்த சால்வை அனுவித்து, மாலை அனுவித்து மரியாதை செய்த சினேகன் – கன்னிகா தம்பதியினர். இளையராஜா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.

இளையராஜாவை சந்தித்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சினேகன் மனைவி கன்னிகா. அதில் சினேகன் – கன்னிகா தம்பதியினர் இளையராஜா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் போது, இளையராஜா செருப்பு காலுடன் இருந்தார். இந்த விடியோவை பார்த்த ரசிகர் ஒருவர். ஆசீர்வாதம் பண்ற போது செருப்ப கழட்டனும்னு தோனல அவருக்கு. ஆசீர்வாதம் வாங்கும் போது கால தொட்டு தான் வாங்குவாங்க. செருப்ப கழட்டி இருக்கலாம் என்று ரசிகசர் ஒருவர் கமண்ட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த கன்னிகா ‘அவர தப்பா நினைக்காதீங்க.அவருக்கு சில மெடிக்கல் பிரச்சனைனால அவர் எப்போதும் வீட்ல கூட சாக்ஸ் அல்லது செருப்பு போட்டு தான் இருப்பாங்க’ என்று பதில் கூறியுள்ளார். சினேகனின் திருமணத்திற்கு வர முடியாத இளையராஜா, சினேகன் – கன்னிகா தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ஒரு தங்க மோதிரத்தையும் கல்யாண பரிசாக வழங்கியிருந்தார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.