ஒரே நேரத்தில் மூன்று நடிகைக்கு ஸ்கெட்ச் போட்ட தனுஷ்… கடைசி நேரத்தில் கை நழுவியது எப்படி.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி குறுகிய காலத்தில் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றவர். ஒரு கட்டத்தில் மிக பெரிய உயரத்துக்கு வந்த தனுஷ், தான் விரும்பும் இயக்குனர். தான் விரும்பும் நடிகைகள் தான் விரும்பும் துணை நடிகர்கள் ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்றால் நாம் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார் தனுஷ்.

இதனை தொடர்ந்து வோண்டர் பார் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, சொந்தமாக படம் தயாரிக்க தொடங்கினார். அவர் தயாரிப்பில் பெரும்பாலும் தான் விரும்பும் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார் தனுஷ். அந்த வகையில் நடிகை அமலாபால், சமந்தா, தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி போன்ற நடிகைகளுக்கு தன்னுடைய தயாரிப்பில் வாய்ப்பு கொடுத்தார்.

தனுஷ் விரும்பும் நடிகைகளுடன் லூட்டி அடிப்பதற்காக தன்னுடைய தயாரிப்பில் வாய்ப்பு தருவதாக கிசுகிசுகளும் எழுந்தது. இந்த நிலையில் தற்பொழுது தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், ராசிக் கண்ணா, பிரியா பவானி சங்கர், ஆகிய 3 நடிகைகள் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தை இதற்கு முன்பு தனுஷ் சொந்தமான வொண்டர் பார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்துள்ளது. அப்போது இந்த படத்தில் நித்யா மேனன் நடிக்கும் கதாபாத்திரத்தில் நயன்தாராவும், ராசி கண்ணா நடிக்கும் கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானியும், பிரியாணி பவானி சங்கர் நடிக்கும் கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்க இருந்துள்ளார்கள்.

அதாவது தன்னுடைய தயாரிப்பில் ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளுக்கு வலை வீசியுள்ளார் தனுஷ். ஆனால் தனுஷ் தயாரிப்பில் உருவாக இருந்த திருச்சிற்றம்பலம் படம் வெவ்வேறு காரணங்களால் தள்ளித்தள்ளி சென்றதால், அந்த படத்தில் நடிக்க இருந்த நயன்தாரா, ஹான்சிகா மோத்வானி, சமந்தா ஆகியோர் வெவ்வேறு படங்களில் பிசியானார்கள்.

இதனால் பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் நித்யாமேனன் என பல தரப்பில் இருந்து நித்யமேனனுக்கு பாராட்டு வந்து கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா நடித்து இருந்திருந்தால் படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து இருக்கும் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

ரஜினியால் கடனாளியான தனுஷ்… கடனை அடைக்க என்ன செய்தார்  தனுஷ் தெரியுமா.?