வீட்டின் உள்ளே ரன் வே… தனுஷ் 150 கோடி ரூபாய் வீட்டின் சிறப்பு…

0
Follow on Google News

இயக்குனர் கஸ்தூரிராஜா சில சொந்த படங்களை எடுத்து மிகப் பெரிய கடனாளியான் பின்பு, சென்னையில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கே குடும்பத்துடன் சென்றுவிடலாம் என முடிவு செய்து, தேனீக்கு கிளம்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் செல்வராகவன் தன்னுடைய தம்பி தனுஷை வைத்து ஒரு படம் எடுப்போம், கடனோடு கடனாக ஒரு 30 லட்சம் ரூபாய் மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார் செல்வராகவன்

ஏற்கனவே கடனில் தத்தளிப்பதால் தயக்கம் காட்டுகிறார் கஸ்தூரி ராஜா, நீங்க 30 மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் அந்த பணத்திற்குள் படத்தை நான் எடுத்து முடித்து விடுகிறேன் என்று கேட்க ,ஏற்கனவே கடனில் இருந்த கஸ்தூரிராஜா மேலும் 30 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்று துள்ளுவதோ இளமை என்கின்ற படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில் கடனால் தத்தளித்து தேனீக்கு மூட்டை முடிச்சுகளை கட்டி கிளம்பும் நிலையிலிருந்து
கஸ்தூரிராஜாவின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்ட படம் துள்ளுவதோ இளமை. இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்து அவர்களின் குடும்ப வாழ்க்கையே தலைகீழாக மாற்றியது, அதன் பின்பு மிக குறுகிய காலத்திலேயே நடிகர் ரஜினியின் மகளை திருமணம் செய்கிறார் தனுஷ்.

இந்த நிலையில் ஒரு சாதாரண ஒரு குடும்பத்தில் இருந்து வந்த நடிகர் தனுஷ், சென்னையில் முக்கிய விஐபிகள் வசிக்கக்கூடிய இடம் போயஸ் கார்டன், அங்கு சாதாரண சாமானியினால் ஒரு ஸ்கொயர் பீட் இடம் கூட வாங்க முடியாது. அப்படி ஒரு போயஸ் கார்டன் ஏரியாவில் சுமார் நான்கு கிரவுண்டில் 150 கோடி ரூபாயில் மிக பிரம்மாண்டமான ஒரு பங்களாவை தனுஷ் கட்டி முடித்துள்ளது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் வியப்படைய செய்துள்ளது.

மேலும் அந்த பங்களா குறித்த பல சுவாரசிய தகவல்களும் வெளியில் வெளியாகி வருகிறது தனுஷின் இரண்டு மகன்களும் அத்தலடிக் பிளேயர்ஸ், அந்த வகையில் இரண்டு மகன்களும் ஓடுவதற்கு ரன் வே ஓன்று, அந்த பிரம்மாண்ட வீட்டில் இடம்பெற்றுள்ளது, இந்த ரன்வே மிகப்பெரிய செலவில் உலக புகழ் பெற்ற அத்லட்டிக் வீரர்கள் பயன்படும் வகையில் மகன்களுக்காக தயார் செய்துளாராம் நடிகர் தனுஷ்.

அந்த வகையில் மகன்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு அவர்களுக்கு தேவையான , அனைத்து வசதிகளையும் வீட்டில் உள்ளேயே செய்து வைத்துள்ளார் நடிகர் தனுஷ், மேலும் முதல் தளத்தில் செயற்கையான ஒரு கிரிக்கெட் மைதானத்தை ஏற்பாடு செய்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த கிரிக்கெட் மைதானத்தில் தனுஷ் அவருடைய மகன்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடி வருகிறாராம்.

இந்நிலையில் தனுஷ் தீவிர சிவ பக்தர் ஆகையால் தியானம் செய்வதற்காக ஒரு தியான அறை ஒன்று மிக பிரம்மாண்டமாக அந்த போயஸ் கார்டன் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது, இந்த தியான அறையில் சிவனின் மிகப்பெரிய சிலை ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷின் பிரம்மாண்டமான போயஸ் கடன் இல்லத்தில் மார்பில்ஸ் மற்றும் பர்னிச்சர் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும், அந்த வகையில் பார்த்து பார்த்து தனது கனவு இல்லத்தை தனுஷ் கட்டி முடித்துள்ளார் என கூறப்டுகிறது.