ரஜினியை சீண்டி பார்க்கும் தனுஷ்… போயஸ் கார்டனில் இருந்து கொண்டு தனுஷ் செய்வது சரியா.?

0
Follow on Google News

41வது பிறந்த நாளை கொண்டாடும் தனுசுக்கு திரையுலகினர் பலரும் இணையதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தும் வரும் நிலையில், ரசிகர்கள் சிலர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது பிரம்மாண்ட வீட்டின் முன்பு திரண்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது தனுஷின் ஐம்பதாவது படம் என்பதால் அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருவதால் தனுஷ் உட்பட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனரர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், போயஸ் கார்டனில் தான் புதிதாக கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டைப் பற்றியும் தனது ஆரம்பகால வாழ்க்கை பற்றியும் குட்டி ஸ்டோரியாக சொல்லி அரங்கம் அதிரும் அளவிற்கு கைதட்டலை பெற்றார்.தான் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது பற்றி இருந்தாலும் பேசிய வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரல் ஆகியது.

நெட்டிசன்கள் பலரும் தனுஷ்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், பல்வேறு தரப்பினரும் போயஸ் கார்டனில் வீடு வாங்கியதை கர்வமாக பேசுவதாகவும் தனுஷின் பேச்சு செயற்கையாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், தனுஷ் அவரது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக அவரது வெறித்தனமான ரசிகர்கள் சிலர் போயஸ் கார்டன் வீட்டிற்கு நேரடியாக சென்று உள்ளனர்.

தன்னை சந்திப்பதற்காக வீட்டின் முன் கூட்டமாக திரண்ட ரசிகர்களை பார்த்ததும், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு கை கொடுத்து நன்றி கூறியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தனுஷின் இந்த செயலை இணையவாசிகள் பலரும் பாராட்டி உள்ளனர். திரளான ரசிகர்கள் கூட்டத்தை கண்டதும் பால்கனியில் இருந்தபடியே கையை பேசி சிரித்து விட்டுப் போகும் நடிகர்களுக்கு மத்தியில், தனக்காக பழமையில் தூரம் பயணித்து வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை வீட்டிற்கு வெளியே சந்தித்து கை கொடுத்து நன்றி கூறியது தனுசுக்கு ரசிகர்கள் மீதான மரியாதையை காட்டுவதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் ரஜினி ரசிகர்கள் சிலர், பொதுவாக எந்த ஒரு பண்டிகை தினம் என்றாலும் சூப்பர் ஸ்டார் வீட்டின் முன்பு திரளான ரசிகர்கள் கூட்டம் இருப்பதை காணலாம். ரஜினியை பார்ப்பதற்காக தானா சேரும் கூட்டத்தை, தனுஷ் காசு கொடுத்து சேர்த்து இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். சமீப காலமாக தனுஷ் நடவடிக்கை அனைத்தும் ரஜினி போன்றே உள்ளதாக கருத்து நிலவி வருகிறது.

அதாவது மேடையில் ரஜினி மாதிரி பேசுவது, குட்டி கதை சொல்வது என தன்னை ரஜினிகாந்த் போன்று பேசி வரும் தனுஷ். போயஸ் கார்டன் இல்லத்தில் தன்னுடைய ரசிகர்கள் மன்றம் மூலமாக வீட்டின் முன்பு திரன்டு ரஜினிக்கு வாழ்த்து சொல்வது போன்று தலைவா .! தலைவா.! என கத்தவிடுகிறார் என்றும். மேலும் காசு கொடுத்து கூட ரஜினிக்கு போட்டியா கூட்டத்தை தனுஷ் கூறியிருக்கலாம் என பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், ரஜினி எங்க இருக்கிறார் தனுஷ் எங்க இருக்கிறார், தனுஷின் இந்த செயல் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை போல் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.