தனுஷ் இனி எந்திரிக்கவே முடியாது… ஐஸ்வர்யா பிரிவுக்கு இது தான் காரணம்… தனுஷுக்கு என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து, கடந்த 5 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் தன்னுடன் நடிக்கும் பல நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்ததால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவருக்கும் இடையில் சில வருடங்களாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. மோதல் உச்சகட்டத்தை அடையும் போது, இனி இந்த மாதிரி நடக்காது என சமாதானம் செய்யும் தனுஷ் சில நாட்களில் மீண்டும் தனது சேட்டையை தொடங்கி விடுவார்.

இப்படி தொடர்ந்து சக நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்த தனுஷ் ஒரு கட்டத்தில், நான் இப்படி தான் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என மனைவி ஐஸ்வர்யாவை பொருட்படுத்தாமல் சக நடிகைகளுடன் இரவு பார்ட்டி, ஆட்டம் பாட்டம், அஜால் குஜால் என்று இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் 2022ம் ஆண்டு தொடங்கத்தில் ஆரம்பம் முதல் தனுஷ் எதிர்பாராத மிக பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

2022ம் ஆண்டு தொடங்கிய சில நாட்களில் மனைவியை விட்டு பிரிந்தார், அதன் பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை, OTT வரலாற்றில் மோசமா படம் வரிசையில் முதல் இடத்தை பிடிக்கும் வகையில் பெருத்த நஷ்ட்டத்தை ஏற்படுத்தியது தனுஷ் நடித்த மாறன் படம், கர்ணன் மற்றும் அசூரன் போன்ற வெற்றி படங்களை தனுஷ் கொடுத்து பெயர், புகழ் என சம்பாரித்து வைத்திருந்தாலும்.

2022 தொடங்கியது முதல் எந்த ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என யாரும் தனுஷை வைத்து படம் எடுக்க முன் வரவில்லை. கடந்த வருடம் வரை தனுஷை வைத்து படம் எடுக்க போட்டி போட்டு கொண்டிருந்த முன்னனி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்களை தனுஷ் தொடர்பு கொண்டு, வாங்க ஒரு படம் பண்ணுவோம் என்று சொன்னால் கூட தெறித்து ஓடுவதாக கூறப்படுகிறது, அப்படி தான் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு தனுஷ் கேட்க, அதற்கு இப்போது முடியாது என எஸ்கேப் ஆகியுள்ளார் வெற்றிமாறன்.

ஒரு காலத்தில் தனுஷை சுற்றி சுற்றி வந்து குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்கிய நடிகைகள் கூட, இப்ப தனுஷை கண்டு கொள்வது இல்லை என்றும், மேலும் முன்னணி நடிகைகள் தனுஷ் படமா வேண்டாம் என்று புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இப்படி 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் அடி மேல் அடி வாங்கி குடும்ப வாழ்க்கையை இழந்த தனுஷ் தற்பொழுது இருக்கும் நிலை தொடர்ந்தால் அடுத்த ஒரு வருடத்தில் சினிமாவில் காணமல் போய் விடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா அம்மா லதா ரஜினிகாந்த், ஜாதக நம்பிக்கை கொண்டவர். பிரபல ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே ஒவ்வொரு நடவடிக்கையையும் லதா மேற்கொள்வர், அந்த வகையில், 2022 ம் ஆண்டு தொடங்குவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் இருக்கும் அனைவர் ஜாதகத்தை பிரபல ஜோதிடர் ஒருவரிடம் பார்த்துள்ளார் லதா, அப்போது குடும்பத்தில் அனைவருடைய ஜாதகமும் மிக அற்புதமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனுஷ் ஜாதகத்தில் சமீப காலமாக அடிக்கடி கணவன் மனைவி இடையே மோதல் இருந்து வந்திருக்கும் என்று தெரிவித்த ஜோசியர், 2022ம் ஆண்டு தொடங்கி அடுத்த ஏழு வருடத்துக்கு தனுஷ் ஜாதகத்தில் எதை தொட்டாலும் தோல்வியில் தான் முடியும், மேலும் அவருடன் இணைந்து வாழும் அவரது மனைவி செய்யும் தொழிலும் அவருடைய கணவர் ஜாதகப்படி பின்னடைவை தான் ஏற்படுத்தும், மிக பெரிய சரிவை அவரது துறையில் சந்திக்க இருக்கும் தனுஷ் இனி மீண்டும் எதிரிக்கவே முடியாது என் ஜோசியர் தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த ஐஸ்வர்யா, தொடர்ந்து தனுஷ் உடன் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து, தனுஷை விட்டு விலகினால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் மேலும், தொடர்ந்து எதற்காக தனுஷ் உடன் சண்டையிட்டு குடும்ப நடத்த வேண்டும், அவர் எந்த நடிகையுடன் எப்படி போனால் நமக்கென்ன என முடிவு செய்து கணவர் தனுஷை விட்டு விலகிய ஐஸ்வர்யா தன்னுடைய கவனத்தை சினிமா பக்கம் திரும்பியுள்ளார், அதே வேலையில் ஜோசியர் சொன்னது போன்று 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் தனுஷ் அடிமேல் அடி வாங்கி பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிட தக்கது.

திரிஷா வீட்டுக்கே சென்று கரெட் செய்த கமல்…தப்பித்த சமந்தா.. இந்த வயசிலும் கமல்ஹாசன் என்ன செய்தார் தெரியுமா.?