யாரை ஏமாத்துற… விசித்ராவை வெச்சு செஞ்ச கூல் சுரேஷ்… வாயடைத்து போன விசித்தரா…

0
Follow on Google News

இதுவரைக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அமைதியின் சொரூபமாக இருந்த கூல் சுரேஷ் நேற்று சூறாவளியாக மாறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். இதுவரைக்கும் கமல்ஹாசன் முன்னாடி கூட நான் எந்த பிரச்சனையிலும் தலையிட மாட்டேன், ஒதுங்கி நின்று கொள்வேன். ஏதாவது பிரச்சனை நடக்கும் இடத்தில் நம்ம கூட இருந்தால் நாமும் அங்கே பேச வேண்டும், பிறகு அவமானப்பட வேண்டும். அது எதற்கு? அதனால் நான் தனியாகவே இருந்து கொள்கிறேன் என்று பேசி வந்தார் கூல் சுரேஷ்.

ஆனால் தனக்கு எப்பவாவது பிரச்சனை வருகிறது என்றால் அங்கு கூல் சுரேஷ் பதிலடி கொடுக்க தவறவில்லை. அதுவும் போட்டியாளர்களுக்கு கையில் கயிறு கட்டி டாஸ்க் வைக்கப்பட்டு இருந்தபோது அது குறித்து கமல் விசாரிக்க போது கூல் சுரேஷ் விசித்திராவை பற்றி பல தகவல்களை போட்டு உடைத்து இருந்தார். அதற்கு பிறகு விசித்ரா மற்றும் கூல் சுரேஷ் இடையே அடிக்கடி பிரச்சனை முட்டி மோதிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக அர்ச்சனா வந்து ’நான் நிக்சனை நாமினேட் செய்கிறேன், காரணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து வந்த விஷ்ணு, ‘ஒரு வார்த்தையை கூறி இந்த வார்த்தையின் அர்த்தம் டிக்சனரியில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை என்று கூறி பூர்ணிமாவை நாமினேட் செய்கிறார்.

இதனை அடுத்து விசித்ரா வந்து ’எனக்கும் தினேஷுக்கும் ஆகாது என்று இந்த வீட்டுக்கு எல்லாருக்கும் தெரியும்’ என்று கூறி அவரை நாமினேட் செய்கிறார். மேலும் கூல் சுரேஷ்க்கு அவருடைய குடும்பம் ஞாபகமாக இருக்கிறது. அதனால் அவரை நாமினேஷன் செய்கிறேன். அவர் வெளியே போனால் சந்தோஷமாக இருப்பார் என்று விசித்திரா பேசியிருந்தார்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கூல் சுரேஷ் அவருடைய டைம் வந்தபோது விசித்திராவை நாமினேஷன் செய்கிறேன் என்று சொன்ன கூல் சுரேஷ், விசித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கவே உனக்கு தகுதி இல்லை என்றும் அம்மா அம்மா என்று சொல்லி ஏமாத்தறீங்க. நேத்து நைட்டு சும்மா போனவனை கூப்பிட்டு உன் கதையை சொல்லு என்று பாவம் படுவது போல பேச அதனால் தான் நான் என்னுடைய கதையை சொன்னேன்.

ஆனால் இப்போது அதை வைத்து என்னை நாமினேஷன் செய்திருக்கிறார். இது எந்த வகையில் நியாயம். இதற்கு பெயர் பச்சோந்தி தனம் என்றும், விசித்திரா ஒரு சரியான பச்சோந்தி என்று தன்னுடைய மனதில் இருந்த மொத்த பாரத்தையும் இறக்கி வைக்கும் வகையாக மொத்தமாக கொட்டி தீர்த்து விசித்திராவிற்கு எதிராக தனது குரலை பதிவு செய்திருந்தார் கூல் சுரேஷ்.

இந்த சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்த கூல் சுரேஷ் சில வாரங்கள் கூட தாக்கு பிடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர் 60 நாட்களைக் கடந்து வீட்டுக்குள் இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்திருக்கிற கூல் சுரேஷ் இந்த வாரத்தை கடப்பாரா? அல்லது விசித்திராவை எதிர்த்து பேசியதால் வெளிய அனுப்பப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் ஆரம்பத்தில் விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் பூமராக பேசிக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அதிகமாக இருந்தது.

அதுபோல பிரதீப்போடு ஆரம்பத்தில் அதிகமான சண்டை சச்சரவுகளில் விசித்திரா ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பிறகு பிரதீப் வெளியே சென்றதும் திடீரென்று பிரதீப்புக்கு ஆதரவாக விசித்திரா பேசியது ரசிகர்களின் மத்தியில் அதுவரைக்கும் விசித்ராவுக்கு இருந்த நெகட்டிவ் இமேஜை உடைத்து விட்டது. பிறகு இவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் ஒரு சில நாட்களாக விசித்திராவின் நடவடிக்கை ரசிகர்களின் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.