அந்த மனசு தான் சார் கடவுள்…சிரஞ்சீவியை பார்த்து வெட்கி தலைகுனியும் ரஜினி… என்ன செய்தார் சிரஞ்சீவி தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஆண்டு கர்நாடகாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகன் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவருடைய மரணம் கர்நாடகா சினிமா துறையை மட்டுமின்றி, அம்மாநில மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

புனித் ராஜ்குமார் சினிமாவில் மட்டும் ஹீரோ கிடையாது, நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோ என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். ஆதரவற்ற முதியோர்களுக்கு முதியோர் இல்லம், ஏழை மாணவர்களை படிக்க இலவச பள்ளிக்கூடம் என புனித் ராஜ்குமார் சொந்தமான அறக்கட்டளை மூலம் பல தொண்டுகளை கர்நாடக மக்களுக்கு செய்து வந்தார்.

அவர் மறைவுக்குப் பின்பும் கூட அவர் செய்து வந்த தொண்டுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு அவருடைய அறக்கட்டளைக்கு மாதம் தோறும் வருமானம் வரும் அளவுக்கு முதலீடு செய்து வைத்து சென்றுள்ளார் புனித் ராஜ்குமார். இந்நிலையில் இதே போன்று தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, தெலுங்கு சினிமா துறையை சார்ந்தவர்களுக்கு புதிய மருத்துவமனை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவருடைய தந்தையின் நினைவாக ஹைதராபாத்தில் இந்த மருத்துவமனை கட்ட இருக்கிறார். இந்த மருத்துவமனையில் அனைத்து செலவையும் ஏற்றுக் கொண்டு, ஏழைத் சினிமா தொழிலாளர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டும் வகையில் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்ட பின்பு, தெலுங்கு சினிமா துறைக்கு ஒப்படைக்கிறார் சிரஞ்சீவி.

இந்த நிலையில் கர்நாடகாவில் ஒரு புனித் ராஜ்குமார், தெலுங்கானாவில் ஒரு சிரஞ்சீவி, இப்படி தங்களை வாழ வைத்த அந்த மாநில மக்களுக்கும் தங்கள் சார்ந்த துறையினருக்கும் உதவி செய்து வரும் இந்த நடிகர்கள் மத்தியில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித், கமல் போன்றவர்கள், அவர்களை வாழ வைத்த தமிழக மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்த்து தலைகுனிந்து செல்ல வேண்டும் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு ஆபத்தாகிவிடும்… சந்திரமுகி 2 படத்தில்  நடிக்க ரஜினி மறுப்பு…எச்சரிக்கை சமிக்கை என்ன தெரியுமா.?