பொம்பள சொக்கு கேட்ட பப்லுவை கழட்டி விட்ட காதலி…. அட ஒரு வருஷம் கூட தாக்கு பிடிக்கல…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் பப்லு ப்ரித்விராஜ், சிவாஜி, ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதோடு பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். குறிப்பாக அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படத்தில் பப்லுவின் வில்லத்தனம் பரவலாக பேசப்பட்டது.

பின்னர் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். ப்ருத்விராஜ் சினிமாக்களில் நடித்து கொண்டிருக்கும் போதே 1994ஆம் ஆண்டில் பீனா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 28 வயதில் அஹத் என்ற மகன் உள்ளார்.

அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கிடையே சீரியலில் பிஸியாக நடித்து வரும் பப்லு பிரித்விராஜ், கடந்த ஆண்டு பொதுநிகழ்ச்சியில், என்னை ஆரோக்கியமாக கவனித்து கொள்வது என் மனைவி ஷீத்தல் என 24 வயது இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இணையவாசிகள், பப்லுவை கண்டபடி விளாசினார்கள். 54 வயதில் 24 வயது பெண் கேட்குதா என்றும், இந்த வயசில் பொம்பள சோக்கு கேக்குதா என்றும் பப்லுவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு எல்லாம் கொஞ்சமும் அசராத பப்லு, என்னை பாருங்க நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன், உடம்பை எப்படி பிட்டாக வைத்து இருக்கிறேன் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான் என்றார்.

மேலும், அதோடு தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஆட்டிசம் பாதித்த தன்னுடைய மகன் தன்னுடைய முதல் மனைவியோடு தான் வாழ்ந்து வருகிறார். நான் தனியாக இருக்கிறேன். அதனால் எனக்கு ஒரு துணை வேண்டும். இப்போது முறைப்படி என்னுடைய முதல் மனைவியிடம் இருந்து நான் விவாகரத்து வாங்கி விட்டேன். அவருக்கு நான் ஷீத்தலை திருமணம் செய்யப் போவதும் தெரியும்
என்னையும் ஷீத்தலையும் ஏதோ கொலை குற்றம் செய்தது போல பலரும் எங்களை கடுமையாக கிண்டல் செய்து விமர்சித்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களை எதிர்கொள்ள கஷ்டமாக இருந்தது. ஆனால், இப்போது இதை Fun ஆக எடுத்துக்கொள்கிறோம் என்று இருவரும் தங்களது வாழ்க்கையை ஜாலியாக ரசித்து வாழ்ந்து வந்தனர்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பப்லு, எனக்கும் ஷீத்தலுக்கும் திருமணமாகவில்லை. நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள். மேலும் மூன்று புகைப்படங்கள் மட்டும்தான் பப்லுவோடு எடுத்த புகைப்படத்தை சீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கிறார். அதிலும் பப்லு பக்கத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தான் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மட்டும் தான் டெலிட் ஆகவில்லை.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பிரித்திவிராஜ் தன்னுடைய பிறந்தநாளை தனியாக கொண்டாடி இருக்கிறார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். பின் ஷீத்தல் போட்ட பதிவை பார்த்து ரசிகர் ஒருவர், நீங்கள் பிரிந்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு சீத்தலை லைக்ஸ் கொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த ஜோடி…ஏன் பிரிந்தார்கள்?என்று தான் தெரியவில்லை. மீண்டும் இவர்கள் சேர்வார்களா? இல்லையா? என்று ரசிகர்கள் குழப்பத்திலேயே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.