தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட அருண் விஜய்… எதற்கு இந்த விபரீத ஆசை… திருந்த வேண்டும் அருண் விஜய்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படம் வெளியாகும் பொழுது ரசிகர்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையரங்குகளில் வெளியிடப்படும். இதற்காக ரசிகர்கள் ஒரு டிக்கெட் 2000 ரூபாய் 3000 ரூபாய் கொடுத்து வாங்கி சிறப்புக் காட்சியை பார்ப்பார்கள். இந்த இது திரையரங்குகளுக்கு அதிக லாபத்தை பெற்றுக் கொடுக்கும்.

தற்பொழுது முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக வளர்ந்து வரும் நடிகர்களும் தங்களின் படத்தை, அதிகாலை ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கேப்டன். இந்த படத்திற்கு திரையரங்குகளில் அதிகாலை எட்டு மணி அளவில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சென்னையில் ஒரு திரையரங்குகளில் கொட்டு மேலத்துடன் தொடங்கிய ரசிகர்கள் சிறப்பு காட்சிகளில், படத்தைப் பார்க்க யாரும் வரவில்லை. இறுதியில் அந்த கொட்டு மேளம் அடித்தவர்கள் தான் ஆர்யா நடித்த படத்தை பார்த்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அருண் விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி உள்ள படம் சினம்.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான யானை படம் அவருக்கு நல்ல பாராட்டை பெற்று கொடுத்தது.மேலும் ஆக்சன் ஹீரோவாக இந்த படத்திலிருந்து உருவெடுத்துள்ளார் அருண் விஜய் என்கின்ற ஒரு அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் தற்பொழுது வெளியாகி உள்ள சினம் படம் ரசிகர்கள் கட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்அருண் விஜய்.

இதற்காக பல திரையரங்குகளில் 8 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சிறப்பு காட்சிக்கு யாரும் வராததால் பல திரையரங்குகளில் சினம் படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பது. இந்த நிலையில் சினம் படம் மிக குறுகிய நேரத்தில் கட்சிதமாக எடுக்கப்பட்டுள்ள படம், அருண் விஜய் நடிப்பு அபாரம் என்று அனைவரையும் கவர்ந்து நல்ல பாராட்டை பெற்றுள்ளது.

இருந்தாலும் தன்னை ஒரு முன்னணி நடிகராக காட்டிக் கொண்டு ரசிகர் காட்சி ஏற்பாடு செய்து, இறுதியில் யாரும் சிறப்பு காட்சிக்கு வராததால் பல திரையரங்குகளில் சினம் படம் ரத்து செய்யப்பட்டது. இது அருண் விஜய்க்கு மிகப்பெரிய நெகட்டிவ் ஆக அமைந்துள்ளது. இதனால் அருண் விஜய் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போன்று அமைந்துள்ளது. ஆகையால் இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அருண்விஜய்க்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.