அஜித் நடிக்கும் பேன் இந்தியா படம்.. பின்னணியில் பாஜக.. என்ன கதை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் போன்று நடிகர் அஜித்குமாரும் தீவிர ஆன்மீக பற்று கொண்டவர், அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய குருவாக எப்படி ராகவேந்திராவை ஏற்றுக் கொண்டாரோ, அதே போன்று நடிகர் அஜித்குமார் தன்னுடைய குருவாக சாய்பாபாவை ஏற்றுக் கொண்டவர். ரஜினி அடிக்கடி ராகவேந்திராவை வழிபடுவது போன்று நடிகர் அஜித் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாமல் சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் தன்னுடை பிறந்தநாளான மே 1-ம் தேதி புனேயில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தும் வந்துள்ளார், அந்த அளவுக்கு சாய்பாபா மீது தீவிர பக்தி கொண்டவர் அஜித் குமார். மேலும் அஜித் தன்னுடைய ஒவ்வொரு படம் தொடங்குவதற்கு முன்பு திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அஜித் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஷாலினி கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கூட இருவருமே அவரவர் மதத்தை பின்பற்றி இதுவரை வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இருவருமே எந்த ஒரு மதத்திற்கும் மாறவில்லை. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய நூறாவது படமாக ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் கதையை மையப்படுத்தி ஸ்ரீ ராகவேந்திராவாக நடித்தார்.

இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திரா மீது கொண்ட தீவிர பக்தி தான். அந்த வகையில் தற்பொழுது தயாரிப்பாளர் தாணு பல படங்களை தயாரிப்பதற்கு அடுத்தடுத்து பல நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளார், அதில் வாடிவாசல் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படம் என்று பல படங்களை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார், ஆனால் அந்த படங்கள் அனைத்தும் அறிவிப்போடு நின்று கொண்டிருக்கிறது. அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தானு தற்பொழுது ஒரு பேன் இந்தியா படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய படத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு வட இந்தியாவைச் சார்ந்த ஒரு முக்கிய நபர் பைனான்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட இருக்கும் இந்த புதிய படம், இதற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன். RRR போன்று மிக பிரம்மாண்டமாக எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நடிப்பதற்காக சாய்பாபாவின் தீவிர பக்தராக இருக்கும் நடிகர் அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர் தானு சாய்பாபா வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு தயாரிக்க இருக்கும் பேன் இந்தியா படத்திற்கு பைனான்ஸ் செய்ய இருக்கும் அந்த வட இந்தியாவைச் சார்ந்தவர்கள் பாஜக பின்புலம் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தீவிர ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அஜித்தை சாய்பாபா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வைப்பதற்காக நடை பெற்ற பேச்சுவார்த்தையில், அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு உறுதியான தகவலும் தெரியப்படுத்தவில்லை என்பதால், அஜித் இந்த படத்தில் நடிக்க மறுக்கும் பட்சத்தில், பாலிவுட் நடிகர் ஒருவர் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.