செம்ம டென்ஷனில் அஜித் … தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட வெங்கட்பிரபு… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இசைஞானி இளையராஜா தம்பி கங்கை அமரன் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி, சென்னை 600028 படத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வெங்கட் பிரபு, முதல் படமே செம்ம ஹிட் கொடுத்தது, அடுத்து சரோஜா, கோவா சுமாரான படங்களை கொடுத்த வெங்கட் பிரபு தன்னுடைய நான்காவது படத்தில் அஜித் உடன் இனைந்தார், அவர் இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற வெங்கட் பிரபு, மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய்யை அழைத்து வந்து தமிழ் சினிமாவில் இரண்டு துருவங்களாக இருக்க கூடிய அஜித் – விஜய் இருவரையும் ஒன்றாக சந்திக்க வைத்து இருவரும் நண்பர்கள் தான் என்பதை அவரவர் ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படி நடந்து கொண்டவர் வெங்கட் பிரபு, மேலும் அஜித் – விஜய் இருவரிடமும் நல்ல நட்பில் இருந்து வருகிறார் வெங்கட் பிரபு.

இந்நிலையில் சமீப காலமாக வெங்கட் பிரபு தந்தை கங்கைஅமரன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். நீண்ட காலமாக அண்ணன் இளையராஜா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்து வந்த கங்கை அமரன், சமீபத்தில் தான் தனது அண்ணனை சமாதனம் செய்து ஓன்று சேர்ந்தார். இதன் பின்பு தற்பொழுது அதிக நேரம் அண்ணன் இளையராஜா உடன் செலவு செய்து வருகிறார் கங்கை அமரன்.

சமீபத்தில் இளையராஜா குறித்து மாமனிதன் படத்தின் இசை கம்போஸிங்கில் அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமியை அனுமதிக்கவில்லை என்கிற செய்தியாளர் கேள்விக்கு, இது குறித்து அண்ணனிடம் கேட்டு பதில் சொல்கிறேன் என தெரிவித்த கங்கை அமரன், தன்னுடைய மகன் வெங்கட் பிரபு தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருக்கிறார், அதன் பின்பு விஜய் மற்றும் அஜித் இருவரையும் வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பேன் இந்தியா படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்தார்.

இந்த தகவல் தமிழ் சினிமாவில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து படம் நடிக்க இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்ததில் உண்மை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மீடியா பப்ளிசிட்டிக்காக போகிற போக்கில் அடித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இது மிக பெரிய விவாத பொருளாக மாறி நடிகர் அஜித்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மங்காத்தா 2 விரைவில் எடுப்பது குறித்து அஜித் உடன் வெங்கட் பிரபு பேசி வைத்திருந்த நிலையில், விரைவில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெரும் என தகவல் வெளியான நிலையில் கங்கை அமரனின் சமீபத்திய பேச்சு அஜித்தை டென்ஷன் அடைய செய்து, மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பே இல்லாதவது கங்கை அமரன் செய்துவிட்டார் என கூறப்படுகிது.

பிரபுதேவா செய்த அட்டூழியம்… நயன்தாராவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்… என்ன அட்டூழியம் தெரியுமா.?