வாழ்க்கையின் விளிம்பில் இருந்தவரை இரண்டே நிமிடத்தில் காப்பாற்றிய அஜித்… யார் தெரியுமா.?

0
Follow on Google News

எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் பலருக்கு உதவி செய்து வரக்கூடியவர் நடிகர் அஜித் குமார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் அனைவருக்கும் தன்னுடைய செலவில் வீடு கட்டி கொடுத்தவர் அஜித் குமார். அதேபோன்று அஜித் ஆரம்பக்கட்டில் சினிமாக்களை தொடர்ந்து தயாரித்து வந்தவர் நீக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.

அஜித் நடித்த ராசி படத்தை தயாரித்ததின் மூலம் அஜித்துக்கு அறிமுகமான சக்கரவர்த்தி அஜித்துடன் நெருங்கி பழகி வந்தார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியுடன் தொழில் ரீதியாக உறவு வைத்துக் கொண்டு, தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் அஜித் நடிக்க முடிவு செய்தார். அந்த வகையில் முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன் என தொடர்ந்து ஹிட் படங்களில் நிக்க்ட்ஸ் தயாரிப்பில் நடித்து வந்தார் அஜித்.

ஆனால் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அஜித்தை ஏமாற்றும் வகையில் லாபக் கணக்கை குறைத்துக் காண்பித்து வந்துள்ளார். இதன் பின்பு நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இயக்கத்தில் அஜித் நடித்த ஜி மற்றும் ஆஞ்சநேயா ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது. ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் கணக்கை அஜித்திடம் சரிவர நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காண்பிக்கவில்லை.

இருந்தும் தான் நடித்த இரண்டு படம் தோல்வி அடைந்ததால் அவருக்கு மேலும் ஒரு படம் வெற்றி படம் கொடுத்து அவரை தூக்கி விட வேண்டும் என்கின்ற நோக்கில் மீண்டும் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வரலாறு படத்தில் நடித்து சக்கரவர்த்தியை தூக்கி விட்ட அஜித், அதன் பின்பு அவருடைய தயாரிப்பில் எந்த ஒரு படமும் நடிக்காமல் விலகினார்.

இப்படி தனக்கு நெருக்கமான ஒருவர் ஏமாற்றியது தெரிந்தும் கூட அவருக்கு உதவி செய்யும் மனம் கொண்டவர் அஜித். அந்த வகையில் அஜித்தின் நெருங்கிய ஒரு பத்திரிக்கையாளர் அடிக்கடி அஜித்தை அவருடைய வீட்டில் சந்தித்து வந்துள்ளார். அப்படி ஒரு நாள் சந்திக்கும்போது அந்த பத்திரிக்கையாளர் மிகவும் சோகமாக காட்சி அளித்துள்ளார்.

அஜித் அவரிடம் என்ன உங்க பிரச்சனை,ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நான் நன்றாக தான் இருக்கிறேன் என அஜிதிடம் அந்த பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். இருந்தும் அஜித் நம்புவதாக இல்லை, உங்கள் பிரச்சனை என்ன என்று முதலில் சொல்லுங்கள், நீங்கள் வழக்கம் போல் இல்லை, என அஜித் கட்டாயப்படுத்தி கேட்டுள்ளார்.

இதற்கு அந்த பத்திரிக்கையாளர் தான் இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும், கடன் காரர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்,அதுதான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன் என அந்த தெரிவித்துள்ளார். உடனே அஜித்குமார், யாரிடம் கடன் வாங்கினீர்கள் என்று விசாரித்து அந்த கடன் காரர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களுக்கு இவர் தரவேண்டிய கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து நான் தருகிறேன்.

அவரிடம் வாங்கிய பத்திரம் மற்றும் புரோநோட் என அனைத்தையும் எடுத்து வாருங்கள் என வரவழைத்து, அந்த பத்திரிகையாளர் வாங்கிய கடனை அடைத்து அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் அஜித் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.

பறிபோகிறது சூர்யாவின் தேசிய விருது… இந்திய அளவில் மிக பெரிய அவமானத்தை சந்திக்கும் சூர்யா..!