அவன் பைத்தியக்காரன்… நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.? விஜய் தூக்கி பிடித்து அஜித்தை விலாசிய முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் அஜித் மீடியாக்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் இன்றளவிலும் அவரைக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல், தளபதி விஜய் அடுத்தடுத்து நடிக்கும் அத்துனை படங்களையும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி வெற்றி பெறச் செய்கின்றனர்.

இவ்வாறு தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரண்டு மிகப்பெரிய நடிகர்களில் யாரேனும் ஒருவரை அவதூறாக பேசினால் கூட அவர்களின் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள். அப்படி இருக்கையில், பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் அவர்கள் தளபதி விஜயை தூக்கி வைத்தும் அஜித் குமாரை இறக்கியும் பேசியுள்ளார். அஜித்தைப் பற்றி மாணிக்கம் நாராயணன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி அஜித் ரசிகர்களிடையே வெறுப்பைத் தூண்டியுள்ளது.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம்தான் வேட்டையாடு விளையாடு. இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன் அவர்கள்தான். மேலும், நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட படங்களையும் இவர்தான் தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளராக வலம் வந்த இவர், சமீபத்தில் குழுதம் மற்றும் ஆகாயம் தமிழ் சேனல்களில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்போது, அவர் நடிகர் அஜித்தை வார்த்தைகளால் சரமாரியாக விளாசியுள்ளார். அவர் கூறியது என்னவெனில், “ஆமா, அஜித் மாபெரும் நடிகர்தான், அவருக்கு படத்தில் நடிக்கத் தெரியாது. ஆனால், வாழ்கையில் நல்லா நடிப்பார்.. படத்தில் சும்மா வந்து அப்படி, இப்படி என தொந்தியைக் காட்டிக்கொண்டு நடிப்பார் அவ்வளவுதான்” என்று சாடியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “95 காலக்கட்டங்களில் அஜித் என்னிடம் பணம் கேட்டான். நான் கொடுத்து உதவினேன். அப்போது, சினிமாவில் நல்ல நடிகனாக வளர்ந்து வந்த பின்னர், எனக்கு டேட் தருகிறேன் என்றான். ஆனால் இதுவரை ஒரு படத்திற்கு கூட டேட் தரவே இல்லை. அவன் ஜென்டில் மேனா..? மனிதனுக்கு வாக்கு முக்கியம் தம்பி.. ” என்று அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, தளபதி விஜயைப் பற்றிப் பேசிய மாணிக்கம் நாராயணன், விஜய் தன்னடக்கம் கொண்டவர் என்றும், அவர் தான் மிகப்பெரிய ஸ்டார் என்றெல்லாம் தலைக்கனத்துடன் பழகமாட்டார் என்றும் புகழ்ந்துள்ளார். அத்துடன் நடிகர் விஜயுடன் அஜித்தை மறைமுகமாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார். அதாவது, “லியோ படத்திற்காக, இந்தியா முழுக்க புரமோஷன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கூட, விஜய் ஓடோடி வந்து பங்கேற்பார்.

சொல்லப்போனால், விஜயை எளிதாக டீல் செய்யலாம் மற்றும் அவருக்கு எந்த விஷயத்தையும் பேசி புரிய வைத்து விடலாம். ஆனால், ஒரு சிலர் படம் நடித்ததோடு தன் கடமை முடிந்ததென்று ஓடி விடுகிறார்கள், புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.அவனெல்லாம் பைத்தியக்காரன். ஒரு படத்தில் நடித்து விட்டு, அதையும் ப்ரோமோஷன் செய்ய கூப்பிட்டால் ஒளிந்து கொள்வது, படக்குழுவோடு சேர்ந்து புரமோஷன் செய்வதை விட, உனக்கு என்ன பெரிய வேலை.

அப்படியென்றால் என்ன ஹீரோ நீ.. உன்னை படங்களுக்கு புக் செய்யக்கூடாது. ரஜினி சார், கமல் சாரே புரமோஷனுக்கு வருகிறார்கள்.. நீ என்ன அவர்களை விட பெரிய ஆளா?” என்று சரமாரியாக நடிகர் அஜித்தை விமர்சனங்களால் தாக்கியுள்ளார். மாணிக்கம் நாராயணன் கொடுத்த இந்த பேட்டி, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல, அஜித், விஜய் ரசிகர்கள் கமென்ட்களில் விவாதித்து வருகின்றனர். என்ன இருந்தாலும், மாணிக்கம் நாரயனன் நடிகர் அஜித் பற்றி இவ்ளோ பகிரங்கமாக பேசியிருக்கத் தேவையில்லை என்றே தோணுகிறது…