அஜித் மட்டும் இதை செய்யாமல் இருந்திருந்தால்.. விஜய்யின் நிலமை படு மோசமாகிருக்கும்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்க கூடியவர்கள் விஜய் – அஜித் இருவரும், சினிமாவில் போட்டியாளராக கருதும் விஜய் – அஜித் இருவர் குறித்தும் தற்பொழுது பரப்பான தகவலை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கொந்தளிக்கவும் அஜித் ரசிகர்களை கொண்டாடவும் செய்துள்ளார் இயக்குனர் பேரரசு.

இந்நிலையில் இவர்களைப் பற்றி பேரரசு சில தகவல்களை கூறியுள்ளார். இயக்குநர் பேரரசு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் விஜய்யை வைத்து திருப்பாச்சி படம் எடுத்தேன் அப்போதே அவர் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் கொடுத்தார். அவர் எப்போதுமே மாணவர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்.

தற்போது அவர், மாணவர்களுக்காக செய்த உதவி அரசியலாக மாற்றிவிட்டார்கள். அவர் மாணவர்களுக்காக உதவி செய்ததை அரசியலாக்கி கொச்சைப்படுத்துகிறார்கள். அவர் இதை திடீரென செய்யவில்லை, எப்போதும் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.” என்று பேசியுள்ளார். மேலும், “விஜய்யை வைத்து நான் படம் எடுத்து இருக்கிறேன், இதுவரையில் அவர் கதையிலும், வசனத்திலும் தலையிட்டது இல்லை.

ஆனால், தற்போது அவர் நடிக்கும் படத்தில் அரசியல் வசனங்கள் வருவதற்கு காரணம் இயக்குநர்கள் தான். அவர் வைக்கும் வசனத்தை அவர் ஏற்றுக்கொண்டு உடன்பட்டு நடிக்கிறார். மேலும், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் ரஜினி, அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் என்று அடுத்தவர்களுக்கு அந்த பட்டத்தை கொடுக்கலாம்.

ஆனால், மற்றவர்கள் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை எடுத்துக்கொள்வதில் உடன்பாடு இல்லை.” என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, “ரஜினி – கமல், அஜித்-விஜய் என்று பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களான அது மாதிரி ரஜினி-விஜய் என்பது பேசுபொருளாகி உள்ளது. இதற்கு காரணம் அஜித் தான், அவருக்கு இப்போது இல்லை 20 வருடத்திற்கு முன்பு இருந்தே பைக் ரேஸ் மீதுதான் ஆர்வம்.

அவர் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் சினிமாவிற்கு வந்தேன் என்று பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். தலவந்துவிட்டால் ரஜினி-விஜய் பஞ்சாயத்து சரியாகி விடும். அஜித் சினிமாவில் முழு கவனம் செலுத்தி இருந்தால் விஜய்க்கு இந்த நிலைமையை வந்திருக்காது. விஜய்யைப் ஓரம் கட்டி விட்டு சென்றிருப்பார். அஜித் இல்லாத நேரத்தை பயன்படுத்தி தான் விஜய் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்தார். அஜித் தனக்கு பிடித்த விஷயங்களை செய்யக்கூடியவர். அதனால் தான் அவருக்கு இன்னமும் ரசிகர் பட்டாளமே உள்ளது”. என்றார்.