பெரும் ஆபத்தில் தப்பித்த அஜித் …அபாய கட்டத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்.. அஜித் தப்பித்தது எப்படி.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு, இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருந்தார். துணிவு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பொழுதே தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் அஜித், அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு அளித்தார்.

மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பது என ஒப்பந்தம் செய்யப்பட்டது, முதலில் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க இருந்த நிலையில், பின்பு நயன்தாராவுக்கு திருமணம் ஆனதால் அப்படத்தில் இருந்து நயன்தாரா வெளியேற்றப்பட்டார், இந்த நிலையில் துணிவு படத்தை முடித்துவிட்டு ஜனவரி இறுதியில் புதிய படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருந்தார் அஜித்.

ஆனால் பல்வேறு குளறுபடியால் படத்தின் படப்பிடிப்பு தள்ளி சென்று போனது, இந்த நிலையில் பிப்ரவரி இறுதி வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான செட் அமைக்கும் பணிகளும் தொடங்கிய நிலையில், திடீரென அஜித் நடிக்கும் புதிய படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டுள்ளார். அஜித் நடிக்கும் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டதற்கான சில காரணங்கள் வெளியாகி உள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் கடந்த வருடம் சென்னை அருகே பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு வரை நயன்தாரா தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல தொடர்ந்து சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டு, ஒவ்வொரு படத்திற்கும் அவருடைய சம்பளமும் அதிகரித்தது அதேபோன்று அவருடைய செல்வாக்கும் அதிகரித்தே சென்றது.

இந்த நிலையில் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியதில் இருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பிரச்சனை மேல் பிரச்சனை சந்தித்து வருகிறார்கள். இவர்கள் எதைத் தொட்டாலும் அது மிகப் பெரிய பிரச்சினையாகவே உருவெடுத்து உள்ளது. மேலும் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியதில் இருந்து இவர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய வருகிறது.

அந்த வகையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுடைய திருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்தவர்கள், நயன்தாரா கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு அந்த ஓ டி டி தளம் பெருந்தொகைக்கு விலை கொடுத்து வாங்கியது, ஆனால் நயன்தாரா கழுத்தில் தாலிய கட்டிய நேரமா என்று தெரியவில்லை, இவ்வளவு பெரிய தொகைக்கு நாங்கள் வாங்க முடியாது என கைவிரித்துச் சென்று விட்டது அந்த ஓடிடி தளம்.

இதனால் பெரும் தொகை இந்த தம்பதியினருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சுத்தி சுத்தி அடிக்க தொடங்கி விட்டார் என்கின்றனர் பிரபல ஜோதிடர்கள். நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருடைய வாழ்க்கையை திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு பின்பு என பிரித்து பார்க்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற விக்னேஷ் சிவன்.

திருமணத்திற்கு பின்பு படத்தை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த விக்னேஷ் சிவன் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிவன் மீது அஜித்துக்கும் பட தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வெறுப்பு ஏற்பட்டு கதை பிடிக்கவில்லை என வெளியேற்ற பட்டது கூட விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள கட்டம் தான் என்கிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே கிடைத்த வாய்ப்பு கைநழுவி போகும் என்கின்ற ஜாதக கட்டம் செல்கிறது என சுட்டி காட்டிய ஜோதிடர்கள், இநீ விக்னேஷ் சிவன் இயக்கும் படங்கள் கூட மிகப் பெரிய தோல்வியைத் தான் சந்திக்கும் என எச்சரிக்கும் ஜோதிடர்கள், இந்த விஷயத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்தால் அந்த படம் விக்னேஷ் சிவன் ஜாதகப்படி மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கும்.

அந்த வகையில் பெரும் ஆபத்திலிருந்து அஜித் தப்பித்துக் கொண்டார், ஆனால் தற்பொழுது மிகப் பெரிய மோசமான ஜாதக கட்டத்தில் இருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், அடுத்தடுத்து தொழில் ரீதியாக பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும், அந்த வகையில் மிகப்பெரிய ஆபத்து கட்டத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் இருப்பதாக ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.