ரஜினி சொன்ன ஒரே வார்த்தை… மீண்டும் இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர்.. நடந்தது என்ன.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக சிறு சிறு சண்டைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஐதராபாத்தில் ஒரே ஓட்டலில் தங்கி இருந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இடையில் ஏற்பட்ட உச்சகட்ட மோதலின் காரணமாக அன்று நள்ளிரவில் தங்களின் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக இருவரும் அதிரடியாக அறிவித்தனர்.

இதன் பின்பு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும், குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இவர்கள் இணைய வேண்டும் என்ன ரஜினிகாந்த் விருப்பத்தை இருவரும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். தனுஷ் ஒருபக்கம் சினிமாவில் பிசியானார் மறுபக்கம் ஐஸ்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்து அடுத்த தான் இயக்கும் புதிய படங்களின் ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளில் தீவிரமாக இருந்து வந்தார்.

ஆனால் பிரிந்த ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதியினர் சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கான எந்த ஒரு முயற்சியும் நீதிமன்றம் வாயிலாக எடுக்கவில்லை. இதனால் இவர்கள் எந்த நேரமும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும் ஏற்கனவே தன்னுடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த ரஜினிகாந்த்.

இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பின்பு தான் நிம்மதி பெருமூச்சு அடைந்தார். ஆனால் இந்த நிம்மதி சில காலம் கூட அவருக்கு நீடிக்கவில்லை. அடுத்த சில மாதங்களில் மூத்த மகள் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்தது ரஜினிகாந்தை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. மேலும் இதனால் தன்னுடைய கோபத்தை அவ்வப்போது தன்னுடைய மனைவி மகள்கள் மீது வெளிப்படுத்திக் கொண்டே இருந்து வந்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், எனக்கு பெயர், புகழ், பணம் என அளவுக்கு அதிகமாக இருந்தாலும், என் வாழ்க்கையில் பத்து சதவீதம் கூட நிம்மதி இல்லை என தன்னுடைய மன உளைச்சலை வெளிப்படுத்தி இருந்த. ரஜினிகாந்த் இந்த பேச்சுக்கு மூத்த மகள் ஐஸ்வர்யா அவருடைய கணவர் தனுஷை விட்டு பிரிந்தது தான் என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் குடும்பத்தின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கக்கூடியவர்கள், தந்தையின் மன உளைச்சலை புரிந்து கொண்டு மீண்டும் கணவருடன் இணைய வேண்டும் என ஐஸ்வர்யாவை வற்புறுத்தி வந்துள்ளனர். அதே நேரத்தில் தனுஷ்யிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து ரஜினியை மீண்டும் வேதனை அடைய செய்ய கூடாது என்கிற முடிவுக்கு வந்த தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர்.

மீண்டும் இணைந்து வாழ்வதற்கு முன் வந்தனர். இந்த நிலையில் தற்போது தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் யாத்ரா படிக்கும் பள்ளியில் விளையாட்டு துறையில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக பங்கேற்ற புகைப்படம் தனுஷ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. உள்ளது இந்த புகைப்படத்தின் மூலம் பிரிந்த தம்பதியினர் நாங்கள் மீண்டும் இணைந்து விட்டோம் என்று வெளிப்படுத்துவதற்காக தனுஷ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் மேடையில் உருக்கமாக பேசிய அந்தஒரு வார்த்தை தான் பிரிந்த தம்பதியினரை மீண்டும் இணைந்து வைத்துள்ளது என கூறப்படுகிறது.

ரஜினியால் கடனாளியான தனுஷ்… கடனை அடைக்க என்ன செய்தார்  தனுஷ் தெரியுமா.?