பொண்டாட்டியை கைவிட்டு ..ஹிந்தியில் குஜால் செய்கிறான்… முக்கிய பிரபலம் சொன்ன பரபரப்பு தகவல்..

0
Follow on Google News

இயக்குனர் அமீர் சமீபத்தில் பேசுகையில், 100 கோடி ரூபாய்க்கு லாபம் இருப்பதால் தான், நடிகர்களுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். இது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் நடிகர்களுக்கும் உள்ள ஒரு ஒப்பந்தம். ஆகையால் இதைப் பற்றி விமர்சனம் செய்வது தேவையற்றது என தெரிவித்து இருந்தார. அமீர் இந்த கருத்துக்கு பதில் தரும் விதத்தில் முக்கிய பிரபல சினிமா தயாரிப்பாளர் ராஜன் கூறுகையில்.

அமீர் எதோ ஒரு ஹீரோவின் கால் சீட் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார. அதனால் தான் இவ்வாறு அவர் பேசுகிறார். ஆனால் இதில் உண்மை இல்லை, நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகரை வைத்து அமீர் ஒரு படம் எடுத்து லாபம் பார்க்கலாமே, ஏன் அமீர் ஹீரோவாக நடித்த ஒரு படம் என்ன ஆச்சு, ஒரு தலை பட்சமாக அமீர் பேசக்கூடாது. அமீர் சொந்தமாக தயாரித்த படம் என்னாச்சு.?

கடந்த பத்து வருடங்களில் வெளியான பெரிய நடிகர்களின் படங்களில் யார் அதிகம் லாபம் சம்பாதித்தது என்பதை அமீர் கை காட்டி கூற முடியுமா.? பெரும் நடிகர்களை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் அனைவரும் கிளோஸ் ஆகிவிட்டார்கள். விஜய், அஜித்தை வைத்து படம் எடுத்தவர்கள் யாருமே தற்பொழுது இல்லை என்பது அமீர் க்கு தெரியாத என தெரிவித்த கே ராஜன்.

மேலும், கர்நாடகாவில் கேஜிஎப் படத்தின்நடித்த நடிகர் சம்பளம் வாங்கவில்லை.அதற்கு பதில் லாபத்தில் பங்கு கேட்டார். இந்த படத்தில் நடித்த அந்த நடிகரின் பங்கு மட்டும் 300 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. ஆனால் இங்கு ஒரு நடிகர் பொண்டாட்டியை கைவிட்டு விட்டார். 18 வருடம் வாழ்ந்த பொண்டாட்டியை தள்ளி வைத்து விட்டார். அவன் ஒரு படம் நடிக்கிறான் நடித்துக் கொண்டிருக்கும் போது ஹிந்தியில் நடிக்க வாய்ப்பு வருகிறது.

உடனே நடித்து கொண்டிருக்கும் படத்தை பாதியிலே விட்டுவிட்டு ஹிந்தி படத்தில் நடிக்க ஓடிவிட்டார். அப்படியானால் இவர் பாதியிலேயே விட்டு சென்ற அந்த படத்தின் தயாரிப்பாளரின் கதி என்ன.? அவர் கடன் வாங்கிய பணத்திற்கு வட்டி என்ன ஆச்சு.? சம்பளத்தையும் குறைக்க மாட்டார்கள். இந்தி படத்திற்கு போய் அங்கே குஜால் செய்து அந்த படத்தை முடித்துவிட்டு, இங்கே வந்து விட்டுச் சென்ற பாதி படத்தில் நடித்து கொடுத்தால் அந்த தயாரிப்பாளரின் நிலைமை என்ன ஆவது என கே ராஜன் கடுமையாக பேசினார்.

அஜித்திடம் இருக்கும் கருப்பு பணம் …. ரெய்டுக்கு பயந்து அந்த பணத்தை அஜித் என்ன செய்தார் தெரியுமா.?