நடிகை மீனாவுக்கு கே.ராஜன் ஏஜென்டா.? பீதியை கிளப்பிய முக்கிய பிரபலம்… கணவர் மரணத்தில் மர்மம் என்ன.?

0
Follow on Google News

நடிகை மீனா கணவர் மரணம் குறித்து மீண்டும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பின் காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார், அவர் மரணத்தின் போது சினிமா பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி பேசியது சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கணவர் விருப்பத்திற்கு மாறாக நடிகை மீனா நடந்து கொண்டதால், கடுமையான மன உளைச்சலில் மீனா கணவர் இருந்தது போன்று பேசியிருந்தார் பயில்வான்.இதற்கு சினிமா துறையினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர், அதில் தயாரிப்பாளர் கே ராஜன் மிகக் கடுமையாக பயில்வான் ரங்கநாதனை இந்த விவகாரத்தில் திட்டி பேசி இருந்தார், இதற்கு பதிலளிக்கும் விதத்தில் யூ ட்யுப் சேனல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார்.

அதில், ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளன் என்கின்ற முறையில் மீனாவின் கணவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என நான் தெரிவித்தது உண்மைதான். இதுவரை அந்த சந்தேகத்திற்கான பதில் கிடைக்கவில்லை. இது என்னுடைய தொழில், இது ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளரின் வேலை. அப்படி இருக்கையில் தயாரிப்பாளர் கே ராஜன் என்னை மிகக் கடுமையாக திட்டி பேசியுள்ளார்.

நான் மீனா கணவரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக பேசிய பின்பு, நடிகை மீனா யாரையும் குறிப்பிடாமல் பொதுவாக ஒரு கோரிக்கை ஒன்று அனைவருக்கும் வைத்திருந்தார். இதுபோன்று யாரும் பேச வேண்டாம் என்று, அதன் பின்பு அதைப்பற்றி நான் பேசவில்லை. ஆனால் கே.ராஜன் யார்.? அவர் என்ன நடிகை மீனாவுக்கு ஏஜெண்டா.? அல்லது மீனாவிடம் எவ்வளவு காசு வாங்கிக்கொண்டு என்னை திட்டுகிறார் என கடுமையாக பேசிய பயில்வான்.

கே ராஜன் என்னை நேரில் சந்தித்தார், அப்போது இது குறித்து நேரில் கேட்டிருக்கலாம், ஆனால் நேரில் கேட்காமல் ஒரு சினிமா இசை வெளியீட்டு விழாவில், அந்த சினிமா தொடர்பாக பேசாமல் என்னை திட்டி பேசுகிறார். தெரு நாய்க்கு பதில் சொல்ல வேண்டும் என்கின்ற அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் ராஜன் இப்படி என்னை திட்டி பேசி இருக்கிறார், அதனால் பதிலடி கொடுக்க வேண்டும் என்று, இந்த யூ டுயூப் சேனல் கேட்டுக்கொண்டதன் பெயரில் நான் இதற்கு பதில் தந்து கொண்டிருக்கின்றேன்.

ஜெயலலிதா மரணம் குறித்து பல பத்திரிகைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது, இந்த விசாரணை இன்னும் முழுமை அடையாத போது கூட பல்வேறு சந்தேகங்களை பலர் எழுப்பினார்கள். இதெல்லாம் கேட்க முடியுமா கே ராஜன். இது ஒரு புலனாய்வு பத்திரிகையின் உரிமை, அதைத்தான் நானும் செய்தேன். கே.ராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் தொலைபேசியை துண்டித்து விட்டார்.

கே.ராஜனுக்கு நேரில் பேசக்கூட தைரியம் இல்லை. இதுதான் கடைசி, இனிமேல் என்னை பற்றி நீங்கள் திட்டி விளம்பரம் தேடக்கூடாது என்கின்ற கோரிக்கையை உங்களுக்கு நான் வைக்கின்றேன். இனி இது போன்ற தெருநாய்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

ஒரே ஒரு நோட்டீஸ்..மொத்த இமேஜும் டேமேஜ்… அந்தர் பல்டி அடித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்..!