தாய் ஐஸ்வர்யாவை எச்சரித்த மகன்கள்.. ஐஸ்வர்யா திமிரை எப்படி மகன்கள் அடக்கினார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து தங்களுடைய திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இவர்கள் பிரிந்த பின்பு இவர்களின் இரண்டு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தாயின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தனர். ஆனால் இரண்டு மகன்களும் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது அதிகம் பாசம் கொண்டவர் என கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா பெரும்பாலும் குடும்பத்தை கண்டு கொள்வதே இல்லை, சுதந்திரமாக வெளிநாடு ஷாப்பிங் செல்வது, தோழிகளுடன் ஊர் சுற்றுவது, யோகா பயிற்சி, பரதநாட்டியம் ஆடுவது இப்படி எதையும் உருப்படியில்லாமல் செய்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன்னுடைய இரண்டு மகன்களுடன் நேரத்தை செலவு செய்து மகிழ்ச்சியாக இருக்க கூடியவர்.

அந்த வகையில் இரண்டு மகன்களும் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது தான் அதிக பாசத்துடன் இருக்கின்றவர்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் பிரிந்த பின்பும் கூட எப்போதெல்லாம் தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக் ஊட்டி சுற்றுலா செல்வது, சென்னையில் நடந்த இளையராஜா கச்சேரி நிகழ்ச்சியில் மகன்களுடன் ஜாலியாக கலந்து கொண்டு வந்தார் தனுஷ்.

தனுஷ் தன்னுடைய இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் மீடியாக்களில் தொடர்ந்து வெளியானது. இதனால் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தையிடம் தான் இரண்டு மகன்களும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்கிற பார்வை மக்கள் மத்தியில் எழுந்தது. இதனால் ஐஸ்வர்யா இமேஜ் டேமேஜ் ஆனது. ஆனால் தனுஷ் இமேஜ் குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் உயர தொடங்கியது.

இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மகன்களும் தனுஷ் உடன் நெருக்கமாக இருப்பது தன்னுடைய இமேஜை பாதிக்கும் என்பதால், தனுஷ் உடன் இரண்டு மகன்களை வெளியில் அனுப்ப கூடாது என்கிற முடிவுக்கு வந்தார் ஐஸ்வர்யா. மேலும் தனுஷ் போட்டியாக இரண்டு மகன்களும் தன் மீது பாசமாக இருக்கின்றார் என்கின்ற ஒரு பிம்பத்தை வெளியுலவுக்கு காண்பிப்பதற்காக, இரண்டு மகன்களுடன் வாரம் ஒரு முறை கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார் ஐஸ்வர்யா.

தந்தையை பார்க்காமல் சில நாட்களை அமைதியாக இருந்த இரண்டு மகன்கள் ஒரு கட்டத்தில், தாய் ஐஸ்வர்யாவை எதிர்க்க தொடங்கியுள்ளார்கள், இதில் மூத்த மகன் யாத்ரா மிக பக்குவமாக பேச கூடியவர் என்று கூறப்படுகிறது. மகன்கள் டார்ச்சர் தாங்க முடியமால், ஓகே இது தான் கடைசி என தனுஷை சந்திக்க இரண்டு மகன்களையும் அனுமதித்துள்ளார் ஐஸ்வர்யா. தந்தையை சந்தித்த இரண்டு மகன்கள் உங்களுடனே நிரந்தரமாக இருந்து விடுகிறோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருந்தும் தனுஷ் சமாதானம் செய்து இரண்டு மகன்களையும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இதன் பின்பு தாய் ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்து கொண்டே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் நாங்கள் அப்பாவிடமே நிரந்தமாக இருந்து விடுகிறோம். அது தான் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என பேசி மகன், இனி நாங்கள் விரும்பும் போதெல்லாம் அப்பாவை பார்க்க வேண்டும்.

இல்லை என்றால், அப்பாவிடமே நிரந்தரமாக இருந்து விடுவோம், அதர்க்கான சட்ட நடவடிக்கைகளை அப்பா தனுஷ் மூலம் எடுக்க வைப்போம் என மூத்த மகன் யாத்ரா தெரிவிக்க, சற்று நேரம் ஆடி போய் விட்டார் ஐஸ்வர்யா. இதன் பின்பு தனுஷை மகன்கள் சந்திக்க எந்த ஒரு ஆட்சேபம் தெரிவிப்பது இல்லை என கூறப்படுகிறது. இதன் பின்பு தான் திருசிற்றம்பலம் பட ப்ரோமோஷன் அணைத்து நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தனுஷ் உடன் இரண்டு மகன்கள் பங்கேற்றுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து மகன்கள் இருவரும் தனுஷ் பக்கம் இருப்பதால், இனி வேறு வழியில்லை அவர்கள் பக்கம் சென்று தான் ஆக வேண்டும் என்பதால், தனுஷ் உடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்க்கு முன் வந்த ஐஸ்வர்யா, சமீபத்தில் நடத்த யாத்ரா பள்ளி நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் தாய் ஐஸ்வர்யாவின் திமிரை மகன்கள் அடக்கியுள்ளது பாராட்டுக்குரியது என்கிறது சினிமா வட்டாரங்கள்.

சமந்தாவால் சிறைக்கு செல்லும் லிங்குசாமி… சமந்தா வலையில் லிங்குசாமி சிக்கியது எப்படி தெரியுமா.?