தமிழ் நோ… தெலுங்கு ஓகே .. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் கார்த்திக்… யார் ஹீரோ தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரமாண்ட செலவில் தற்போது திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். படம் வெளியாகி சுமார் 15 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

வந்தியத்தேவனாக நடித்த கார்த்திக் அடுத்து இயக்குனர் ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்துள்ளது. கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா, பையா உள்ளிட்ட ஒரு சில படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியானது. மேலும் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்திக்.

அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, உங்களுக்கு தமிழ் ரசிகர்கள் பிடிக்குமா.? அல்லது தெலுங்கு ரசிகர்கள் பிடிக்குமா.? என கேட்டபோது, அதற்கு கார்த்திக், தமிழ் ரசிகர்கள் படத்தை ரசிக்க மாட்டார்கள் ஆனால் தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியும் மிகவும் கவனமாக ரசிப்பார்கள். எனக்கு தமிழ் ரசிகரை விட தெலுங்கு ரசிகர்கள் தான் அதிகம் பிடிக்கும் என கார்த்திக் தெரிவித்தார்.

இதனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் கார்த்திக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் நடிகர் கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால், ராஜமௌலியின் அடுத்த இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் இருக்க கதாநாயகனாக தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் தீபாவளி முடிந்ததும் ராஜமௌலி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனக்கு தமிழ் ரசிகரை விட தெலுங்கு ரசிகர்கள் தான் மிகவும் பிடிக்கும் என கார்த்திக் தெரிவித்ததற்கு பலனாகத்தான் தெலுங்கு பட இயக்குனர் ராஜமொழி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மது போதையில் எடுத்த விபரீத முடிவு… மனம்விட்டு பேசிய தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி.. 150 கோடி வீடு யாருக்கு.?