தனுஷ் – செல்வராகவன் உச்சகட்ட சண்டை…உன்னை நம்பி மோசம் போயிட்டேன்.. என்ன சண்டை தெரியுமா.?

0
Follow on Google News

மனைவி ஐஸ்வர்யாவை விட்டுபிரிந்து வாழ்ந்து வந்த நடிகர் தனுஷுக்கு ஆதரவாக இருந்து வருவது அவரது குடும்பத்தினர் தான், தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடந்து வருவதற்கு காரணம், தனுஷ் சக நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி வந்தது தான் என கூறப்பட்டாலும், தனுஷ் சம்பாரிக்கும் பணத்தில் அவர் குடும்பத்திற்கு கொடுத்து வந்தது ஐஸ்வர்யாவுக்கு விருப்பம் இல்லை என்றும், இதனாலும் இவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தனுசை சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் செல்வராகவன், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என செல்வராகவன் இயக்கத்தில் ஆரம்பத்தில் தனுஷ் நடித்த படங்கள் தான் அவரை மிக பெரிய உச்சத்துக்கு தூக்கி சென்றது. பல மேடைகளில் எனது குரு செல்வராகவன் என்றே தனுஷ் தெரிவித்துள்ளார். புதுப்பேட்டை படத்திற்கு பின்பு செல்வராகவன் இயக்கிய அணைத்து படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் தான் இந்த அளவுக்கு உயரத்துக்கு வந்ததற்கு காரணமாக இருந்த அண்ணன் செல்வராகவன் மீண்டும் சினிமாவில் வெற்றி பெறுவதர்க்கு தொடர்ந்து உதவி செய்து வருகின்றவர் தனுஷ். அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். இதில் தனுஷ் இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கதை தனுஷ் உடையது, கதையை தயார் செய்துவிட்டு அண்ணன் செல்வராகவனை இந்த படத்தை இயக்க வைத்துள்ளார் தனுஷ், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் செல்வராகவன் – தனுஷ் இடையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது, நான் சொன்னது போன்று நீ படம் எடுக்க வேண்டும் என தனுஷ் தெரிவிக்க, இல்லை இதை இப்படி எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என செல்வராகவன் விருப்பத்திற்கு படம் எடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது, படத்தின் அவுட் புட்டை தனுஷ் பார்த்த போது நான் எதிர்பார்த்தது போன்று படம் இல்லை, நான் சொன்னது போன்று படத்தை எடுக்க வில்லை, இப்படி சொதப்பி வைத்துள்ளாய், உன்னை நம்பி மோசம் போய்ட்டேன்..என அண்ணன் செல்வராகவனிடம் கோபத்துடன் பேச , அதற்கு செல்வராகவன் படம் வெளியாகட்டும் இது மக்களுக்கு பிடிக்கும், படம் எதிர்பார்த்ததை விட அருமையாக வந்துள்ளது என செல்வராகவன் பதிலளித்துள்ளார்.

ஆனாலும் இவர்களின் சண்டை முடிவுக்கு வந்தது போன்று தெரியவில்லை, எடிட்டிங் வேலையின் போது மீண்டும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக, நீயே உன் இஷ்டத்துக்கு எதாவது செய், நான் வெளியேறுகிறேன் என செல்வராகவன் தனுஷிடம் சண்டையிட்டு வெளியேறியுள்ளார். இதனால் படம் பாதியிலே நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே படத்தின் தயாரிப்பாளர் தாணு, இந்த படத்தின் நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவனை நேரில் அழைத்து பேசியுள்ளார்.

அப்போது உங்க சண்டையை பிறகு வைத்து கொள்ளுங்கள், முதலில் இந்த படத்தை முடித்து கொடுத்து சொன்ன தேதிக்கு படத்தை வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டதை தொடர்ந்து படத்தின் இறுதி கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியான பின்பு தான் அண்ணன் தம்பி இவருடைய பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

தமிழ் நடிகரால் தெருவுக்கு வந்த லிங்குசாமி.. தெலுங்கு நடிகரால் தலைமிர்ந்தது எப்படி தெரியுமா.?