தந்தை கோபிக்கு ராதிகாவை திருமணம் செய்து வைக்கும் இனியா… பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

தொலைக்காட்சி சீரியல்களில் தற்பொழுது விறுவிறுப்பாக அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிற சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியின் கள்ளக்காதல் விவகாரம் மனைவி பாக்யாவிற்கு தெரிய வர குடும்பத்தில் வெடித்த சண்டையின் உச்ச கட்டத்தில் கோபியை விவாகரத்து செய்துவிட்டு யாரும் எதிர்பாராத விதமாக கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் பாக்யா.

ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியே சென்றது மகள் இனியா, தாய் ஈஸ்வரி மற்றொரு மகன் செழியன் ஆகியோருக்கு சிறிதும் பிடிக்கவில்லை. இதனால் பாக்யா மீது கடுமையான கோபத்தில் அவரை வெறுத்து ஒதுக்கும் நிலையில் உள்ளனர். இந்த சூழலில் குடும்பத்தை விட்டு வெளியே சென்ற கோபி தன்னுடைய மகள் இனியாவுக்கு தேவையான உதவிகளை ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து விட்டுக் கொடுக்காமல் செய்து வருகிறார்.

சரியான நேரத்தில் மகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியமால் தவிக்கிறார் தாய் பாக்யா. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் தன்னுடைய குடும்பத்திற்கும் தேவையானதை தொடர்ந்து செய்து வருகிறார் கோபி. இதனால் ஈஸ்வரி, இனியா, செழியன் ஆகியோருக்கு கோபி மேல் மேலும் பரிதாபமும் பாசமும் அதிகரிக்கிறது.

இதனை தொடர்ந்து கோபி வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்து மிக உருகுகின்றனர் ஈஸ்வரி, இனியா மற்றும் அவருடைய மூத்த மகன் செழியன் ஆகியோர். அதே நேரத்தில் தன்னுடைய கள்ளக்காதலி ராதிகாவுடன் மீண்டும் இணக்கமாக நெருங்கி பழகத் தொடங்கி விடுகிறார் கோபி.

இந்த சூழலில் மகள் இனியா அடிக்கடி தந்தையை சந்தித்து வருகிறார், ஒரு கட்டத்தில் தந்தை கோபி மூலமாக ராதிகாவுடன் மிக நெருங்கி பழக ஆரம்பிக்கிறார் இனியா, இதனால் ராதிகா மற்றும் இனியா இருவருக்கும் இடையிலான நட்பு அதிகரிக்கிறது, அதனால் ராதிகாவை அளவுக்கு அதிகமாக நேசிக்க தொடங்குகிறார் இனியா.

ஒரு கட்டத்தில் பாக்யா மீதுள்ள வெறுப்பு, ராதிகா போன்று ஒரு அம்மா நமக்கிலையே என்கிற சிந்தனை இனியா மனதில் தோன்றுகிறது. கோபி மீது உள்ள அளவுக்கதிகமான பாசம் மற்றும் ராதிகா மீது உள்ள ஒரு நட்பு இது அனைத்தும் சேர்ந்து தந்தையை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கோபியிடம் நிர்பந்திக்கிறார் இனியா. இதை சற்றும் எதிர்பாராத கோபி இரட்டிப்பு மகிழ்ச்சியில் ராதிகாவை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.

இதன் பின்பு கோபி -ராதிகா திருமணத்திற்கு பின்பு, ஒரே வீட்டில் கோபி, ராதிகா, மயூரி, இனியா ஆகியோர் வசித்து வருவது அடுத்தடுத்த இனிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கோபி திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் அறிந்த பாக்யா பெரிதாக பொருட்படுத்தமால் அலட்சியமாக கடந்து செல்வது போன்று கதைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?