தந்தையும் மகனும் சேர்த்து செய்த உச்சகட்ட ஏமாற்று வேலை… சிவகுமார் – கார்த்திக் என்ன செய்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து பல்வேறு விருதுகளை அள்ளி குவித்தது. இந்தப் படத்திற்காக சிறந்த குழந்தை நட்சதிரத்திற்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் பல விருதுகளை அள்ளி குவித்த படம் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை.

இந்நிலையில் கடத்த சில காலங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கிலி முருகனை சந்தித்து புதிய படத்திற்கான கதையை தெரிவித்துள்ளார் மணிகண்டன். இந்த படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்த சங்கிலி முருகன்,நேரடியாக விஜயகாந்த் வீட்டிற்கு சென்று கதையை தெரிவிக்குமாறு இயக்குனர் மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார் சங்கிலி முருகன்.

இதை தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினரிடம் இயக்குனர் மணிகண்டன் புதிய படத்திற்கான கதையைத் தெரிவித்துளளார். அதற்கு ஒட்டுமொத்த குடும்பத்தினரும், குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த் கதை மிக அருமையாக இருக்கின்றது, விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு பிரச்சனைகளில் விஜயகாந்த் குடும்பம் சந்தித்து வந்ததை தொடர்ந்து, மணிகண்டன் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படம் தொடர்ந்து தாமதமானது.

இந்நிலையில், இயக்குனர் மணிகண்டன் இதே கதையை நடிகர் சிவகுமாரை சந்தித்து தெரிவித்துள்ளார். கதை மிகவும் பிடித்து போக, உடனே மகன் கார்த்திக்கை அழைத்த இயக்குனர் மணிகண்டனிடம் புதிய படத்திக்கான கதையை கேட்க அறிவுறுத்தியுள்ளார் சிவகுமார். கதையை கேட்ட கார்த்திக் மகிழ்ச்சியில் இயக்குனர் மணிகண்டனை பாராட்டியவர், கதை அருமையாக இருக்கிறது, சர்தார் படம் முடிந்தது இந்த படத்தை தொடங்கலாம் என தெரிவித்துள்ளார் கார்த்திக்.

மேலும் தன்னுடைய அடுத்த படமும் சர்தார் படம் தயாரிப்பாளர் லக்ஷ்மணன் தயாரிப்பில் நடிக்க இருப்பதால், தயாரிப்பாளர் லக்ஷ்மணனை சந்தித்து கதையை தெரிவிக்கும்படி இயக்குனர் மணிகண்டனிடம் கூறியுள்ளார் கார்த்திக். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் லக்ஷ்மணனை சந்தித்து கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கான கதையை தெரிவித்த மணிகண்டனிடம், விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என தெரிவித்து அனுப்பியுள்ளார் சர்தார் பட தயாரிப்பாளர் லக்ஷ்மணன்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் சர்தார் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை பார்த்த காக்காமுட்டை மணிகண்டனுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் படத்தின் டீசரில் இடம் பெற்ற கார்த்திக் முருகன் வேடத்தில் வரும் பாடல் காட்சி, நடிகர் சிவகுமார் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் இருவரிடம், சொன்ன தன்னுடைய புதிய படத்திற்கான கதையில் இடம் பெற்று இருந்த காட்சி என கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே கதையில் விஜயகாந்த் மகன் நடிக்க இருந்த நிலையில், இந்த கதையைக் கேட்ட பிரேமலதா இந்த கதையில் மிக முக்கியமானவை, அந்த கதையில் வரும் முருகன் வேடம் தான் என்று இயக்குனர் மணிகண்டனை பாராட்டியுள்ளார். இந்த நிலையில் சர்தார் படத்தில் பல கெட்டப்பில் வரும் கார்த்திக் தன்னிடம் மணிகண்டன் புதிய படத்திற்கான சொன்ன கதையிலிருந்து ஒரு காட்சியை திருடி தன்னுடைய படத்தில் வைத்துவிட்டார் என்கின்ற ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

மேலும் இயக்குனர் மணிகண்டன் சொன்ன கதையில், அந்த முருகன் வேட காட்சியை மட்டும் தான் திருடப்பட்டு சர்தார் படத்தில் இடம் பெற்றுள்ளதா? அல்லது மேலும் பல காட்சிகள் திருடப்பட்டுள்ளதா என்பது படம் வெளியான பின்பு தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தந்தை மகன் இருவரும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று காக்கா முட்டை மணிகண்டன் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.