தந்தையிடம் மதுபோதையில் ஐஸ்வர்யா இப்படி பேசலாமா.! பாவம்யா ரஜினிகாந்த்.. இருவருக்கும் இடையில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி 17ம் தேதி நள்ளிரவில் இருவரும் பிரிவதாக அறிவித்து அனைவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதன் பின்பு தாங்கள் இருவரும் புதியதாக அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என மகிழ்ச்சியில் இருந்த இருவருக்குக்கு, அவரவர் குடும்பத்தில் இருந்து தொடர்ந்து வந்த அறிவுரை, மீண்டும் இருவரும் இணைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இருவரும் பிரிவதில் தனுஷை விட ஐஸ்வர்யா தான் தீவிரமாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து பிரிந்த பின்பு தனுஷ் குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தனது குடும்ப உறுப்பினர்களை ஒரு வழியாக சமாதானம் செய்த தனுஷ் கடந்த 18 வருட திருமண வாழ்க்கையில் தான் அடைந்த துன்பங்களை சொல்ல,தனுஷ் குடும்பத்தினர் அவர் விருப்பத்துக்கே விட்டுவிட்டனர், ஆனால் ஐஸ்வர்யா குடும்பத்தில் அப்படி நடக்கவில்லை.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு ஐஸ்வர்யா தாயார், மற்றும் சகோதரி ஆகியோர் ஐஸ்வர்யா முடிவுக்கு ஆதரவாக இருந்தார்கள், ஆனால் ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் கடும் கோபம் அடைந்தவர், தனது குடும்ப உறுப்பினர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார், இடையில் அவரை சமாதானம் பேச அவரது குடும்பத்தினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியது, மனைவி லதா மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இடையில் ஒரு முறை ஹைதராபாத்தில் இருந்து தனது தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதனம் செய்ய முயற்சித்த ஐஸ்வர்யா மேலும் தந்தையின் கோபத்துக்கு ஆளானது தான் மிச்சம். இதனை தொடர்ந்து அப்பாவுக்காக மீண்டும் தனுஷ் உடன் இணைய ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்தும், தனுஷ் அதற்கு உடன்படவில்லை, இதனை தொடர்ந்து தந்தையை சமாதானம் செய்ய வழியின்றி தவித்து வந்துள்ளார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் மது அருந்திய ஐஸ்வர்யா, தான் எடுத்த முடிவுக்காக தனது தாய் மீதும் தந்தை ரஜினிகாந்த் கோபத்தில் இருப்பதை சக தோழிகளிடம் சொல்லி மது போதையில் வேதனை பட்டுள்ளார், இதனை தொடர்ந்து தந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டும் பேசியுள்ளார் ஐஸ்வர்யா, உங்களுக்காக கணவனுடன் மீண்டும் இணைய தான் எடுத்த முயற்சிகள் கை கொடுக்கவில்லை.

என்னை என்ன தான் செய்ய சொல்கிறீர்கள் என ஐஸ்வர்யா பேச்சில் வழக்கத்துக்கு மாறாக உளறல் இருந்ததை அறிந்த ரஜினிகாந்த், மகள் போதையில் இருப்பதை தெரிந்து கொண்டு எந்த ஒரு பதிலும் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறபடுகிறது. ஆனால் ஐஸ்வர்யா தொடர்ந்து பேசியவர் ஒரு கட்டத்தில் தந்தைக்கே அறிவுரை வழக்கும் விதத்தில் பேசிய ஐஸ்வர்யா, ஒரு வழியாக சரிங்கப்பா..என தொலைபேசியை துண்டித்துள்ளார்,

இந்நிலையில் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களால் வேதனையை சந்தித்து வரும் ரஜினிகாந்த் வாழ்க்கையில் மேலும் அவரை வேதனை படும் விதத்தில் மது போதையில் ஐஸ்வர்யா பேசியுள்ளது மேலும் அவரை வேதனையடைய செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், கபாலி படத்தில், இன்னும் என் வாழ்க்கையில் என்னென்னல்லாம் பார்க்க போகிறேன் என ரஜினிகாந்த சோகத்தில் பேசிய வசனம் தான் தற்போது அவரது வாழ்க்கையில் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு…..