சிவகார்த்திகேயன் உடன் ஹன்சிகா… செம்ம டென்ஷனில் சிம்பு..! ஹன்ஷிகா என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

தனியார் தலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, தனக்கென ஒரு ரசிகார் பட்டாளத்தை கொண்டிருந்தவர் சிவகார்த்திகேயன், இவர் சினிமாவில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இவருக்கு ஆரம்பத்தில் கிடையாது, விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகர் சந்தானம் போன்று ஒரு காமெடி நடிகராக வேண்டும் என்பது தான் இவரின் ஆரம்ப கட்ட ஆசையாக இருந்தது.

சிவகார்த்திகேயன் மெரீனா படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும், அடுத்து 3 படத்தில் தனுஷ் நண்பனாக காமெடி நடிக்கராக நடித்தார், அதனை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில், நடிகர் விமல் உடன் இணைந்து நடித்தார், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் போஸ்டரில் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை பெரிதாக போட்ட போது , என்னப்பா ..நீங்க விமலுக்கு சமமாக சிவகார்திகேயன் புகைப்படத்தை போட்டு விடுவீர்கள் போல என அந்த படத்தின் இயக்குனர் பாண்டி ராஜன் தெரிவித்துள்ளார்.

அப்போது விமலுக்கு அடுத்த படியாக தான் சிவகார்திகேயன் இருந்துள்ளார். மேலும் நடிகர் கார்த்திக் நடித்த சகுனி படத்தில் சந்தானம் பதில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்துள்ளது , இதற்கான அட்வான்ஸ் தொகையையும் சிவகார்த்திகேயன் வாங்கியுள்ளார். ஆனால் அவருடைய நண்பர் RB ராஜா என்பவர், நீ ஹீரோ மெட்டீரியல் என தெரிவித்து சகுனி படத்தில் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தர வைத்துள்ளார்.

அதே போன்று காமெடி கட்சியில் நடிப்பதற்காக நவீன சரஸ்வதி சபதம் என்கிற படத்தில் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பி தந்துள்ளார் சிவகார்த்திகேயன்.இப்படி சிவகார்த்திகேயனை இயற்கை அவருடைய நண்பர் மூலமாக மிக பெரிய உயரத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர் நீச்சல் படத்துக்கு பின்பு மான் கராத்தே படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன், அப்போது டாப் நடிகையாக இருந்தவர் ஹன்ஷிகா.

மான் கராத்தே படத்தில் ஹன்ஷிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்த போது சிவகார்த்திகேயன் உடன் நடிக்க முதலில் ஹன்ஷிகா சம்மதம் தெரிவிக்கவில்லை, இந்த படத்தின் தயாரிப்பாளர் முருகதாஸ் அவர்களிடம் இயக்குனர் பேசி சார் நீங்க தான் ஹன்ஷிகாவை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கேட்டு கொண்டதை தொடர்ந்து, ஹன்ஷிகாவிடம் இது குறித்து பேசியுள்ளார் முருகதாஸ், ஒரு கட்டத்தில் அதிகம் சம்பளம் பேசி ஹன்ஷிகாவை மான் கராத்தே படத்தில் நடிக்க வைத்துள்ளார் முருகதாஸ்.

அப்போது ஹாஷிகாவை நடிகர் சிம்பு காதலித்து வந்தார், சிவகார்த்திகேயன் உடன் ஜோடியாக நடிக்க கூடாது என சிம்பு கடும் எதிப்பு தெரிவித்தும் முருகதாஸ் கேட்டு கொண்டதற்காக ஹன்ஷிகா மான் கராத்தே படத்தில் நடித்துள்ளார். மேலும் தன்னுடைய சினிமா கேரியரில் தலையிட வேண்டாம் என சிம்புவிடம் ஹன்ஷிகா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இப்படி ஆரம்ப கட்டத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடியாக நடிக்க நடிகைகள் தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்பொழுது சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க முன்னனி நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள், மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் டான் படம் வெளிவருவதர்க்கு முன்பே 30 கோடி வரை லாபம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

டென்ஷனான அஜித்…  கண்ட நாய்கள் எல்லாம் அட்வைஸ் பண்ணுவதா… என்ன நடந்தது தெரியுமா.?