ஒரே மணமேடையில் பாக்யா, ராதிகா… புது மாப்பிள்ளையாக கோபி… அடுத்தகட்ட பரபரப்பு காட்சி என்ன தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை. இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் அதிக பார்வையாளர்களைக் கொண்ட, தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் தற்பொழுது ஒவ்வொரு காட்சிகளும் அடுத்தடுத்த பரபரப்பை ஏற்படுத்தி அதன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நீண்ட நாள் தனது கள்ளக்காதலி ராதிகா விவகாரம் மனைவி பாக்யாவுக்கு தெரியாமல் மறைத்து வாழ்ந்து வந்த கோபி, அவருடைய குடும்பதினரிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டார். இருந்தும் ராதிகாவை விட்டு பிரியா அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் கோபி தன்னிடம் பொய் பேசி தன்னை ஏமாற்றி விட்டார். அதனால் கோபியை விட்டு விட்டு விலகிச் சென்று, வேறு ஒரு ஊருக்கு மகள் மயூரி உடன் செல்ல திட்டமிட்டு வருகிறார்.

இந்த சூழலில் மனைவி பாக்யாவுக்கு தெரியாமலே, கோபி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த விஷயம் பாக்யா உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு பாக்யாவை நேரில் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் பட்டுப் புடவைகள் கட்டி பாக்யா மங்களகரமாக வீட்டிலிருந்து நீதிமன்றத்திற்கு செல்கிறார்.

குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், யாருடைய பேச்சையும் கேட்காமல் என்னை மன்னித்து விடுங்கள், என அவருடைய மாமியாரிடம், ஆசிர்வாதம் பண்ணுக மாமா என வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்து விட்டு நீதிமன்றம் செல்கிறார். தனக்கு துரோகம் செய்த கோபியுடன் இனி ஒரே வீட்டில் வாழ்வதில் எந்த அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வருகிறார் பாக்யா.

நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நடைபெறும் விசாரணையில், ஒருமனதாக இருவரும் பிரிகிறோம் என்று பாக்யா தெரிவிக்க, இதை சற்றும் எதிர்ப்பாராத கோபி அவரும் பிரிவதாக ஒப்புக்கொண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிகின்றனர். விவாகரத்து பெற்ற உடன் நேரடியாக ராதிகாவை சந்திக்க அவரது வீட்டிற்கு செல்லும் பாக்யா, அங்கே ராதிகாவிடம் பேசி கோபியை திருமணம் செய்து நீங்களும், அவரும் சந்தோஷமாக இருங்கள் என தெரிவிக்கிறார்.

அதனை தொடர்ந்து கோபி- ராதிகா திருமணம் நடைபெறுகிறது. அந்த திருமணத்தில் ராதிகா கூட துணை நின்று, ஒரு துணை பெண்ணாக இருந்து தன்னுடைய கணவர் கோபியின் இரண்டாவது திருமணத்தை பாக்யா நடத்தி வைக்க இருப்பது தான் அடுத்தடுத்து வரும் பாக்யலக்ஷ்மியின் பரபரப்பு காட்சிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஓவர் டார்ச்சர்… விஜய் முகத்தில் அடித்தது போல் பேசிய மேனஜர்…உங்க வேலையே வேண்டாம்..ஏன் தெரியுமா.?