ஐஸ்வர்யா போட்ட கண்டிஷன்…. மகனை பார்க்க முடியமால் தவிக்கும் தனுஷ்..! என்ன கண்டிஷன் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இவர்களின் நலன் கருதி பிரிந்த தம்பதியினரை மீண்டும் இணைந்து வைக்கும் முயற்சியில், இரண்டு குடும்பத்தினரும் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த முயற்சி தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அவரவர் வழிகளில் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர்.

யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது அதிகம் பாசம் உடையவர்கள். ஐஸ்வர்யாவை விட தனுஷிடம் தான் அதிக நெருக்கமாக இருக்க கூடியவர்கள் இரண்டு மகன்களும் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா எப்போது சுதந்திரமாக ஜாலியாக இருக்க வேண்டும் என்று விரும்ப கூடியவர், அதனால் பெரும்பாலும் குடும்பத்தில் கவனம் செலுத்துவது கிடையாது. ஆனால் தனுஷ் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது இரண்டு மகன்களுடன் நேரங்களை செலவிடுவதில் தவறாமல் கடைபிடித்து வருகின்றவர்.

இது தான் இரண்டு மகன்களும் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை மீது அதிக பாசமாக இருக்க முக்கிய காரணமாக கூறப்டுகிறது. இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த பின்பு ஆந்திராவில் படப்பிடிப்பில் பிசியாக இருந்த தனுஷ் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும், தனது மகன்களை அழைத்து கொண்டு ஊட்டி சென்றவர், அங்கே மகன்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் இசைஞானி இளையராஜா கச்சேரி நிகழ்ச்சியில் இரண்டு மகன்களுடன் கலந்து கொண்ட தனுஷ். இசை நிகழ்ச்சியை மகன்களுடன் மகிழ்ச்சியுடன் ரசித்த புகைப்படம் வெளியாகி செம்ம வைரலானது.தொடர்ந்து தனுஷ் உடன் இரண்டு மகன்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளிவந்ததை பார்த்தவர்கள், இரண்டு மகன்களும் அப்பா மீது தான் அதிக பாசமாக இருப்பதாகவும், அம்மாவை இருவருக்கும் பிடிக்காது என்கிற விமர்சனம் எழுந்தது.

மேலும் ஐஸ்வர்யா இரண்டு மகன்களையும் கண்டு கொள்ளவே மாட்டார் என்றும், இதனால் பாவம் அந்த குழந்தைகள் என்று ஐஸ்வர்யா மீது கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து தன் மீதும் இரண்டு மகன்களும் பாசமாக இருப்பது போன்று தனக்கு முத்தம் கொடுப்பது போன்றும், மகன்கள் மடியில் ஐஸ்வர்யா அமர்வது போன்றும் புகைப்படம் எடுத்து வாரம் ஒருமுறை வெளியிட்டார் ஐஸ்வர்யா. ஆனால் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தாய் மகன் பாசம் செயற்கையாக இருக்கிறது என்கிற விமர்சனம் எழுந்தது.

இதன் பின்பு புகைப்படம் வெளியிடுவதை நிறுத்திவிட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில் தனது இரண்டு மகன்களையும் சமீபத்தில் வெளியில் அழைத்து சென்று ஜாலியாக இருக்க முடிவு செய்த தனுஷ், இரண்டு மகன்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா இரண்டு மகன்களையும் தந்தையிடம் அனுப்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷ் இரண்டு மகன்களையும் பார்க்க வேண்டும் என்றால், சில கண்டிஷன் போட்டுள்ளார் ஐஸ்வர்யா.

அதாவது. மகன்களிடம் தனுஷ் இருக்கும் புகைப்படம் எந்த ஒரு காரணத்துக்காகவும் வெளியில் வர கூடாது. அப்படி புகைப்படம் வெளியானால், மீண்டும் மகன்களை பார்க்க அனுமதிக்க மாட்டேன் என ஐஸ்வர்யா கண்டிஷன் போட்டுள்ளார். இந்த கண்டிஷனை ஏற்று கொண்ட தனுஷ், சமீபத்தில் தனது இரண்டு மகன்களுடன் சுமார் இரண்டு நாட்கள் வரை வெளியில் அழைத்து சென்று செம்ம ஜாலியாக இருந்தவர். புகைப்படம் ஏதும் எடுத்து வெளியிடவில்லை.

தனுஷ் மகன்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படம் வெளியானால் தனுஷ் உடன் இரண்டு மகன்களும் பாசமாக இருப்பதாக தகவல் பரவி, தனுஷ் மீது ஒரு அனுதாபத்தையும், ஐஸ்வர்யா மீது கடும் விமர்சனமும் எழுந்து வருவதை தவிர்க்க தான் தனுஷ் அவருடைய மகன்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட கூடாது என ஐஸ்வர்யா கண்டிஷன் போட்டு மகன்களை பார்க்க தனுஷுக்கு அனுமதி தருவதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு கிட்னி தானம் செய்தவர்க்கே இந்த நிலைமையா.? நன்றி உணர்வு இல்லாத ரஜினி குடும்பம்.. என்ன தெரியுமா.?