ஐஸ்வர்யா உடன் இணைந்து வாழ தனுஷ் முடிவு… அசிங்கப்படுத்தி அனுப்பிய ஐஸ்வர்யா.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என அப்போதே இரண்டு குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது, இருவரும் இணைவதில் சிறிதும் விருப்பம் இல்லை என திட்டவட்டமாக மறுத்தவர்கள் அவரவர் தனி தனியாக சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர்.

கோபத்தில் எடுத்த முடிவு, எதிர்காலத்தில் மனம்மாறி நீங்கள் மீண்டும் இணையலாம், அதனால் இருவரும் பிரிவதாக அறிவித்ததோடு இருக்கட்டும். விவகாரத்து வரை செல்ல வேண்டாம் என தனுஷ் – ஐஸ்வர்யா இருவரையும் இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர்கள் தெரிவித்த ஆலோசனையின் படி, இருவரும் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறவேண்டாம் என முடிவு செய்தனர். மேலும் குழந்தைகள் நலன் கருதி இருவரும் மறுமணம் செய்யும் முடிவு சிறிதும் இல்லை என கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் தனுஷ். இருவரும் பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பு தொடர்ந்து இருவருக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்டு வந்த பிரச்சனை, மேலும் சக நடிகைகளுடன் தனுஷ் லூட்டி அடிக்க மனைவி ஐஸ்வர்யா தடையாக இருந்து வந்தது போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு மனைவியை விட்டு பிரிந்தால் இனி சுதந்திரமாக சினிமாவில் வேலை செய்யலாம், மகிழ்ச்சியாகவும் இருக்கலாம் என தனுஷ் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் மனைவியை விட்டு பிரிந்த பின்பு அவருடைய சினிமா வாழ்க்கை முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அடி மேல் அடி வாங்கி கொண்டிருக்கிறார் தனுஷ். அறிமுக காலகட்டத்தில் மூன்று வெற்றி படங்களை தனுஷ் கொடுத்திருந்தாலும், அடுத்தடுத்து அவர் சினிமாவில் சரிவை சந்தித்த போது, ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி தான் மேலே வந்தார். இல்லை என்றால் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார் தனுஷ்.

இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து வரும் தனுஷ், மேலும் அடுத்தடுத்து அவருடைய படங்களுக்கு பெரிதாக வரவேற்பும் இல்லை. அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்களில் தொடர்ந்து அடுத்து இரண்டு படங்கள் தோல்வியை தழுவினாலும் சினிமாவில் அட்ரெஸ் இல்லாமல் சென்று விடுவார். இதனை தொடர்ந்து மீண்டும் மனைவியுடன் இணைந்தால் தான் மாமனார் செல்வாக்கை பயன்படுத்தி மேலே வர முடியும் என முடிவு செய்த தனுஷ்.

மனைவியுடன் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்து குடும்பத்தினர் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளார் தனுஷ். ஆனால் ஐஸ்வர்யா இதற்கு, தேவையில்லாத குப்பையை இனி நான் தூக்கி சுமக்க தேவையில்லை. இப்போது தான் நான் நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்த ஐஸ்வர்யா மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வாழ விருப்பம் இல்லை என திட்டவட்டமாக மறுத்து பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களிடம் தனுஷை குப்பையுடன் ஒப்பிட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?