அவசர பட்டுட்டேன்….தனுஷை கட்டிப்பிடித்து கதறி அழுத ஐஸ்வர்யா..! தனுஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஜனவரி 17ம் தேதி சுமார் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு தங்கள் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் வெளியிட்ட அறிவிப்பு பலரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு முன்பு எத்தனையோ சினிமா நட்சந்திர தம்பதிகள் பிரிந்து விவாகரத்து பெற்று இருந்தாலும், தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவு அதி முக்கியத்துவமாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்கிற ஒரே கனத்திற்காக இந்த விவகாரம் முக்கித்துவம் பெற்றுள்ளது. அதே வேலையில் சினிமா துறையை சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இவர்களை இணைத்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவுக்கு பின் ரஜினிகாந்த் நடவடிக்கையில் சில மாற்றங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது மகள் விவாகரத்து செய்து மறுமணம் செய்து வைத்த ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா பிரிவை சிறிதும் ஏற்று கொள்ளவில்லை என கூறபடுகிறது. இளைய மகள் திருமணம் முடிந்த சில காலங்களில் விவகாரத்து பெற்று விட்டார், ஆனால் தற்போது ஐஸ்வர்யா மூத்த மகனுக்கு 17 வயது, இளைய மகனுக்கு 14 வயது, இந்த காலகட்டத்தில் தாய்-தந்தை பிரிவு என்பதை ஏற்று கொள்ள முடியாத ரஜினிகாந்த், தனது குடும்ப உறுப்பினர் யாருடன் சரி வர பேசாமல் அமைதியாக இருப்பதாக கூறபடுகிறது.

இந்நிலையில் தனது இந்த முடிவால் தனது தந்தை தன் மீது கடும் கோபத்தில் இருப்பதை உனர்ந்த ஐஸ்வர்யா அவசரப்பட்டு முடிவு செய்து விட்டோம் என சிந்திக்க தொடங்கியுள்ளார். இதனிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஐதராபாத்தில் தங்கி தனித்தனியே படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இருவரையும் தொடர்பு கொண்டு சமாதான பேச்சில் ஈடுபட்டுள்ளார் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா.

அப்போது தனுஷ் தான் தற்போது தான் முழு சுதந்திரம் பெற்றுள்ளதாக உணர்கிறேன் என தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா தனது தந்தை இந்த விவகாரத்தில் மிகவும் கோபத்தில் இருப்பதை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். இதனிடையே இருவரும் ஐதராபாத்தில் தான் இருக்கிறீர்கள், இருவரும் சந்தித்து பேசினால் சரியாகிவிடும் சென்னை வரும் போது ஒன்றாக வரவேண்டும், அது உன்ன கையில் தான் உள்ளது என ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார் கஸ்தூரி ராஜா.

தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் உள்ள சித்தாரா ஓட்டலில் தங்கியுள்ளனர், இந்த ஸ்டுடியோவில் உள்ள சிதாரா ஓட்டலில் படப்பிடிப்பு நடத்தும் நட்சத்திரங்கள் தங்குவது வழக்கம், அந்த வகையில் தனுஷ் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் அங்கு தங்கி தனித்தனியே படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

அதே நேரத்தில் டிப்ஸ் மற்றும் பிரேர்னா அரோராவுக்காக ஒரு காதல் பாடலை இயக்க ஐஸ்வர்யா தயாராகி வருகிறார். இந்நிலையில் இருவரும் சந்தித்து பேச ஏற்பாடுகள் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தனுஷ் தங்கியிருந்த அறைக்கு சென்ற ஐஸ்வர்யா அவசரப்பட்டுட்டேன், சாரி… என தனுஷை கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார். அப்பாவுக்காவது நாம் மீண்டும் இணைய வேண்டும் என கண்ணீர் விட்டு கதறிய ஐஸ்வர்யாவை சமாதானம் செய்த தனுஷ்.

நாம் இருவரும் சேர்ந்து முடிவு செய்து தான் பிரிவதாக முடிவு செய்தோம். நீ தற்போது மாறிவிட்டாய், ஆனால் எனது முடிவை மாற்றி கொள்ள எனக்கு சில காலம் தேவை படுகிறது என தனுஷ் தெரிவித்ததாக கூறபடுகிறது. இந்நிலையில் இருவரும் ஒரே ஓட்டலில் தனித்தனியே தங்கியிருந்தாலும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஏற்கனவே தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியதுபோல படப்பிடிப்பு பணிகள் முடிந்த பிறகு இருவருமே இணைந்து சென்னை திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறபடுகிறது.