அடமானத்தில் மாதவன் வீடு… வீட்டை மீட்டெடுக்க போராடும் மாதவன்… எதனால் கடன் ஏற்பட்டது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் மாதவன் திரைக்கதை எழுதி, அவருடைய இயக்கத்தில் அவரே நடித்து தற்பொழுது வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ராக்கெட்ரி, இந்த படத்தை மாதவன் தயாரித்துள்ளார், இந்த படம் பல்வேறு கலவையான விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ராக்கெட்ரி படம் பார்த்த ரஜினிகாந்த் தெரிவித்ததாவது, ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும் என தெரிவித்த ரஜினிகாந்த்.

மேலும், நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத்தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என ராக்கெட்ரி படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

அதே நேரத்தில் இந்த படத்தின் முதல் பாதி முழுக்க அறிவியலை மய்ய படுத்தி உள்ளன. இரண்டாவது பாதி முழுக்க செண்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நாசா வேலையை புறந்தள்ளி தேசத்திற்காக இஸ்ரோவில் நுழைந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உள்ளடக்கிய கதை தான் ராக்கெட்ரி. இதில் நம்பி நாராயணன் மனைவியாக மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

இந்த படம் தாய் நாட்டின் மீது பற்று கொண்ட ஒரு விஞ்ஞானியின் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமந்தப்பட்டு அநீதியால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மை கதை. நம்பி நாராயணனாக மாதவன். வெளுத்த தாடி, வெளியில் தெரியும் தொப்பை, வசன உச்சரிப்பு, உடல்மொழி என உண்மையான விஞ்ஞானி நம்பி நாராயணனை நடிப்பின் மூலம் பிரதியெடுத்திருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரான மாதவன் படம் வெளியாகும் முன்பு மிக பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

படத்தின் கதைக்காக, நம்பி நாராயணனை தேடி சென்று, இது உங்களுடைய கதை, அந்த கதைக்கான உங்களுக்கு சேர வேண்டிய படம் இதோ என்று, 80 லட்சம் நம்பி நாராயணனிடம் கொடுத்துள்ளார் மாதவன். படம் வெளியாக இறுதி கட்டத்தை நெருக்கும் போது மிக பெரிய பண சிக்கலில் சிக்கிய மாதவன், தன்னுடைய சொந்த வீட்டை அடமானம் வைத்து, அந்த பணத்தில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்துள்ளார்.

தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து தாய்நாட்டை நேசித்த ஒருவரின் உண்மை கதையை திரைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ள மாதவன் வீட்டை மீண்டும் திருப்ப தற்பொழுது ராக்கெட்ரி படத்தின் வசூலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்பொழுது ரஜினிகாந்த் ராக்கெட்ரி படம் குறித்து வெளியிட்ட கருத்தின் காரணமாக ராக்கெட்ரி படத்திற்கு விளம்பரம் கிடைத்துள்ளது,இதனால் எதிர்பார்த்த வசூலை பெற்று அடமானத்தில் இருக்கும் வீட்டை திருப்பி விடுவாரா மாதவன் என்பதை படத்தின் வசூலை பெருத்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

அச்சரியமூட்டு நயன்தாரா வீட்டு பாத்ரூம்… என்னனென்ன சிறப்பு அம்சங்கள் தெரியுமா.?வாயை பிளக்கும் பிரபலங்கள்..