பொறித்த மீன் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் அதிர்ச்சி மரணம்… புட்பாய்சன் காரணமா?

0
Follow on Google News

சென்னையில் ஆட்டோ ஓட்டும் அன்சர் தனது குழந்தைகளுக்காக கடையில் பொறித்த மீன் வாங்கி வந்து கொடுத்துள்ளார். சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருபவர் அன்சர். அவருக்கு சுரேயா என்ற மனைவியும் ஆஃப்ரின் என்ற பெண் குழந்தையும், அசேன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும்போது தன்னுடைய குழந்தைகளுக்காக ஆசையாக் சைதாப்பேட்டையில் ஒரு கடையில் பொறித்த மீன்களை வாங்கி சென்றுள்ளார் அன்சர்.
ஆனால் அந்த மீனை சாப்பிட்டதும் குழந்தைகள் உடனடியாக வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர் மெடிக்கல்லில் மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார்.

அப்போதும் உடல்நிலை சரியாகாமல் குழந்தைகள் மயங்கியுள்ளனர். இதையடுத்து அவர் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக தூக்கிச் சென்றுள்ளார். ஆனால் குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடல்களை பிணக் கூறாய்வுக்காக அனுப்பியுள்ளனர். அந்த முடிவுகள் வந்த பின்னரே உணவுக் கோளாறு காரணமாக குழந்தைகள் இறந்தனவா என்பது தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.