ஜூலியின் காதல் விவகாரம்… அறிவுரை செய்து அனுப்பி வைத்த போலிஸார்

0
Follow on Google News

ஜூலிக்கும் அவரது காதலர் மனிஷ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் நடந்த போது கவனம் ஈர்த்தவர்களில் ஜூலியும் ஒருவர். அதன் பின்னர் அவர் பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொண்டு தனது இமேஜை டோட்டல் டேமேஜ் ஆக்கிக் கொண்டார்.

ஆனாலும் அவரின் பிரபல்யம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அதையடுத்து சில குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் துண்டு துக்கடா வேடங்களிலும் தலைகாட்டினார். அதன் பின்னர் அட்ரஸ் இல்லாமல் போன அவர் இப்போது மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

இப்போது சென்னை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் மனிஷ் என்பவர் தன்னைக் காதலித்து ஏமாற்றி பைக் மற்றும் தங்க நகைகளை ஏமாற்றி விட்டதாக புகாரளித்துள்ளார். இது சம்மந்தமாக வழ்ககுப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது சம்மந்தமாக மனிஷை அழைத்து போலிஸார் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது மனிஷ் ஜூலி இப்போது வேறொருவருடன் நட்பாக பழகுவதாகவும், அதனால் தன்னை நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் ஜூலி வாங்கி தந்த பைக் மற்றும் நகைகளை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அழித்துள்ளனர். போலிஸார் இருவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.