சிம்புவும் எஸ் ஜே சூர்யாவும் கலக்கிட்டாங்க… பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

0
Follow on Google News

இயக்குனர் ஷங்கர் மாநாடு படத்தைப் பாராட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் எழுதியுள்ளார். மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை பல மடங்கு விரிவடைய செய்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக மாநாடு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் படத்தை திரையுலகினர் அனைவரும் பார்த்து பாராட்டி விட்டனர்.

இந்நிலையில் ராம்சரண் படத்தை இயக்கும் வேலைகளுக்காக ஐதராபாத்தில் இருந்த இயக்குனர் ஷங்கர் இப்போது மாநாடு படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘மிகவும் அறிவுப்பூர்வமான முறையில் மாநாடு படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. சிலம்பரசன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் கலக்கியுள்ளனர்.

படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களும் தங்கள் பங்கை சிறப்பாக அளித்துள்ளனர். டைம் லூப் கதைக் களத்துக்கு சிறப்பாக உதவியுள்ளது. தமிழ் சினிமாவுக்கான புதிய மற்றும் பொழுதுபோக்கான அனுபவம் மாநாடு’ எனக் கூறியுள்ளார்.